1. ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம், "என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.
மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"
வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"
==========
2. "படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?"
"சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."
==========
3. நீதிபதி:ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?
பெண்:உரலைத் தூக்க முடியல்ல சாமி!
==========
4. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.
பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.
நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!
==========
5. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...
ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.
==========
6. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...
அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா?
==========
7. மாமியாரையும் மருமகளையும் ஒரே வீட்டுல வெச்சுக்கிட்டு குப்பைக் கொட்றது ரொம்ப கஷ்டமா இருக்கு...
ஏன்..
வீட்டில ஒரே ஒரு துடப்பமும் முறமும்தான் இருக்கு.
==========
இன்றைய மெகா பிட்டு ஜோக்:
8. ரொம்ப கவலையா இருக்கே போலிருக்கு என்னாச்சு ? முகம் தொங்கிப்போய் வந்த அவனைக் கனிவோடு விசாரித்தான் நண்பன்.
”நான் அப்பாவாகப் போறேன்” என்ற அவனது பதிலில் சோகம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
”வாவ் சந்தோஷமான சமாசாரமாச்சே, இதுக்குப் போய் ஏண்டா கவலைப்படறே”
”என்ன சந்தோசமான சமாசாரம் ? இந்த விஷயம் இன்னும் என் பெண்டாட்டிக்குத் தெரியாது”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment