Friday, October 16, 2009

பிட்டு - 80

1. உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?

பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.

==========

2. ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?

பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.

==========

3. உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.

==========

4. ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?

புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.

==========

5. டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.

==========

6. உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?

ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.

==========

7. மூணு யானை கர்ப்பமா இருக்குது, அதுல ஒண்ணுக்கு பன்னிரண்டு மாசம். இன்னொண்ணுக்கு பதினாறு மாசம். கடைசி யானை இருபது மாசம். இதுல எந்த யானை முதல - குட்டி போடும்.

கடைசி யானைதான்

தப்பு. எதுவுமே முதலைக் குட்டி போடாது. எல்லாமே யானைக் குட்டிதான் போடும்.

==========


இன்றைய பிட்டு ஜோக்:



8. மாப்பிள்ளை இவ்வளவு ஸ்பீடா இருப்பார்னு எதிர்பார்க்;கவே இல்லை.

ஏன் .. .. ?

முதலிரவு முடிஞ்சதும் உடனே நைட் 12-30 மணிக்கு மாமியார் வீட்டுக்கு பிரசவத்தக்கு பஸ் ஏத்தி விட்டுட்டாரே

Saturday, October 3, 2009

பிட்டு - 79

1. யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ?

==========

2. டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?

அதனாலே என்ன ?

மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?

==========

3. ஐயா இல்லீங்களா...? தீபாவளி இனாம் வேணும்!

ஐயாவும் தீபாவளி இனாம் வாங்கத்தான் அடுத்த தெருவுக்குப் போயிருக்காரு.

==========

4. உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.

==========

5. அந்த ஓட்டல் பொங்கல் மணக்க, மணக்க இருக்கும்.

மண்ணாங்கட்டி.. . நீ சொன்னியேனு போய் சாப்பிட்டேன். கைநிறைய இஞ்சி, கறிவேப்பிலை, மிளகுக்கு நடுவே கொஞ்சூண்டு பொங்கலும் இருந்துச்சு.

==========

6. என் காதுல நீங்க போட்ட புதுத் தோடு எங்கேயோ விழுந்திடிச்சுன்னு சொன்னா, அதுக்குச் சந்தோஷப்படறீங்களே. .. ஏன் ?

நான் உன் காதுல போட்டதுல ஏதோ இந்த ஒண்ணாவது விழுந்திருக்கேனுதான்.

==========

7. ஒரு நோயாளி தன் மனைவியுடன், ஆஸ்பத்திரியில்: ”டாக்டர் தெரியாம ஸ்பூனை முழுங்கிட்டேன். கஷ்டமா இருக்கு.. .”

மனைவி: “ஆமாம் டாக்டர். .. ஸ்பூன் இல்லாம ஊறுகாய் எடுக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.. .

இன்றைய மெகா ஜோக்:

8. எல்லா மெகா சீரியல்-களிலேயும் பழைய நடிக, நடிகைகளையே போடறாங்களே. .. ஏன் ?

அவங்கதான் இப்ப மெகா சைஸ்ல இருக்காங்க

பிட்டு - 78

1. தலைவர் பாக்கெட்ல பேனா வைக்கறதுக்குப் பதிலா எதக்கு ஸ்டாம்ப் பேட் வெச்சிருக்கார் ?

கை நாட்டு வைக்கதான்.

==========

2. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள். விழா முடிந்த

பிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார்.

அவரிடம் போன கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி கவலைப்படாதே நீ என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது அடுத்து வரப்போகம் கலெக்டர் என்னைவிட

நல்லவராக இருப்பார் என்று ஆறுதல் சொன்னார்.

அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார் இதை நான் நம்பமாட்டேன் என்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும் இதையேதான்

சொன்னாரு என்றார்.

==========

3. தொகுதி மக்கள் இப்படிக் கேப்பாங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கலை

என்ன கேட்டாங்க ?

இத்தினி வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்து உங்க குடும்பத்துக்கே ஒண்ணும் செஞ்சுக்கலை .. .. எங்களுக்கு என்ன செஞ்சு கிழிக்கப் போறீங்கன்னு கேட்கறhங்க *

==========

4. எதுக்குத்தான் எது இனாம் கொடுக்கறதுன்னு விவஸ்தை இல்லாம போச்சு

எதுக்குப் புலம்பறீங்க .. .. ?

அந்த பாருங்க மாட்டுச் சந்தையில ரெண்டு மாடு வாங்கினா இந்த ஆடு இலவசம்னு சொல்றார் அந்த வியாபாரி

==========

5. சார் நீங்க சமயத்துல ஆயிரம் ரூபா குடுத்து உதவி பண்ணீங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.

என்ன சார் இதுக்குப் போய் நன்றி சொல்றீங்க

அப்படீன்னா இன்னொரு ஆயிரம் ரூபா குடுங்க சார்!

==========

6. என்ன உங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் வீட்டுக்கு வெளியவே நிக்கிறார்

வீட்டுக்கு மேலே திருஷ்டி பொம்மை வச்சிருந்தோம் அது எங்கேயோ காணாம போயிடுச்சு அதுதான் அவரை நிக்க வச்சிருக்கோம்.

==========

7. வெயில் தாங்க முடியலியாம் காருக்குள்ள இருந்தே நடிக்கிறேன்னு ஹிரோயின் சொல்றாங்க.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. நாயை டெஸ்ட் செய்த டாக்டர் அது கர்ப்பமாக இருப்பதாகச் சொன்னார் அந்தப்
பெண்ணுக்குப் பயங்கர கோபம் வந்துவிட்டது.

அதுக்கு வாய்ப்பே இல்லை இந்த நாயை நான் வீட்டுக்குள் கதவைப் பூட்டி வளர்கிறேன் வேறு நாயும் உள்ளே வராது பிறகு எப்படி .. ? என்றாள்.

இந்த நாயோடு சேர்த்து இன்னொரு நாய் வளர்க்கிறீர்களே அது ஆண்நாய்தானே ? என்று கேட்டார் டாக்டர்.

உடனே அந்தப் பெண் முட்டாள்தனமா பேசாதீங்க டாக்டர் அந்த நாய் இவளோட அண்ணன் என்றாள்.

பிட்டு - 77

1. எது எதுக்குதான் போராட்டம் நடத்தறதுன்னு நம்ம தலைவர்க்கு விவஸ்தை இல்லாமப் போச்சு.

ஏன் என்னாச்சு?

கடுமையான வெய்யிலைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாராம்.

==========

2. நேத்து ராத்திரி என் மனைவியை நான் கைநீட்டி அடிச்சுட்டேன்.

ஐயோ அப்புறம் என்னாச்சி?

அதுக்குள்ள என் மனைவி என்னை எட்டி உதைச்சி வேலைக்குப் போக நேரமாச்சு எழுந்திரின்னு கனவைக் கலைச்சுட்டா.

==========

3. மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?

அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.

==========


4. அன்பே வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன்.

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா?

==========


5. நீங்க ஒரு காரியம் பண்ணணுமே டாக்டர்.

நான் ஆபரேஷன் வரைக்கும் மட்டும்தான் பண்ணுவேன் காரியம் எல்லாம் என்னால பண்ணமுடியாது.

==========

6. நம்ம தலைவருக்குப் பொருளாதாரம் பத்தி ஒண்ணுமே தெரியலையே ஏன் ?

பணவீக்கத்தைக் குறைக்கறதுக்கு அயோடெக்ஸ் தடவலாம்னு பேசியிருக்காரு.

==========

7. அந்த ஹார்ட்வேர் இஞ்சினீயர் ஃப்ராடுன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க ?

இது மூலிகையால செஞ்ச சி.டி. இதை உபயோகிச்சா வைரஸ் செத்துடும்னு சொல்றாரு.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. ஷூட்டிங் ஸ்பாட்ல பாடி-யை கையில வெச்சுக்கிட்டு அலையறாரே யார் அவர் ?

அவர் தான் அந்த நடிகையோட பாடிகார்டு.

பிட்டு - 76

1. ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம், "என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முயல்கிறாள்!" என்று பதட்டத்துடன் சொன்னார்.

மானேஜர்: "அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"

வந்தவர்: "ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!"

==========

2. "படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?"

"சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்."

==========

3. நீதிபதி:ஏம்மா அவரை உலக்கையாலே அடிச்சுக் கொன்னே?

பெண்:உரலைத் தூக்க முடியல்ல சாமி!

==========

4. சே... அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.

பேசட்டுமே சார்... நம்ம கட்சிப் பிரமுகர்தானே.

நீங்க வேற ... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்!

==========

5. அந்த ஆஸ்பத்திரியில ஆறாம் நம்பர் ரூமும், நூறாம் நம்பர் ரூமும் ஆபரேஷன் தியேட்டர்...

ஆறுலேயும் சாவு.. நூறுலேயும் சாவுன்னு சொல்லுங்க.

==========


6. நான் வெச்சிருந்த விஸ்கி பாட்டிலைத் தூக்கி என் மனைவி கிணத்துல போட்டுட்டா...

அதான் குடி முழுகிப் போனா மாதிரி இருக்கீங்களா?

==========


7. மாமியாரையும் மருமகளையும் ஒரே வீட்டுல வெச்சுக்கிட்டு குப்பைக் கொட்றது ரொம்ப கஷ்டமா இருக்கு...

ஏன்..

வீட்டில ஒரே ஒரு துடப்பமும் முறமும்தான் இருக்கு.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்:


8. ரொம்ப கவலையா இருக்கே போலிருக்கு என்னாச்சு ? முகம் தொங்கிப்போய் வந்த அவனைக் கனிவோடு விசாரித்தான் நண்பன்.

”நான் அப்பாவாகப் போறேன்” என்ற அவனது பதிலில் சோகம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

”வாவ் சந்தோஷமான சமாசாரமாச்சே, இதுக்குப் போய் ஏண்டா கவலைப்படறே”

”என்ன சந்தோசமான சமாசாரம் ? இந்த விஷயம் இன்னும் என் பெண்டாட்டிக்குத் தெரியாது”

பிட்டு - 75

1. நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துல வாங்க மறுத்துட்டாங்க

ஏன் ?

பதவியில இருக்கறவங்கதான் அதெல்லாம் கொடுக்கணுமாமே

==========

2. கார் ஒட்டக் கத்துக்கறதா சொன்னீங்களே .. இன்னும் முழுசா கத்துக்கலையா ?

இல்லே கொஞ்சம் கொஞ்சமா இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன்

இப்போதைக்கு என்ன கத்துக்கிட்டிருக்கீங்க .. ?

ஹாரன் எப்படி அடிக்கறதுன்னு

==========

3. பக்கத்து வீட்டுக்காரி காபி சாப்பிடணும்னா அதுக்காக எதைத்தான் இரவல் கேட்கறதுன்னு இல்லியா ?

காபி போடியா, சர்க்கரையா எதை இரவல் கேட்டாங்க ?

ரெண்டும் இல்ல காபி போட்டுத்தர அஞ்சு நிமிஷம் என் கணவரை இரவலா அனுப்பணுமாம்

==========

4. நாங்கதான் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டோமோ பையன் ரொம்ப சிக்கனம்னு .. ..

இருக்கலாம் அதுக்காக ஹனிமூனுக்குகூட பெண்ணை விட்டுட்டு தனியாப் போறேன்னு செல்றது நல்லாயில்லே

==========

5. நான் மனசு வெச்சா அந்த மார்வாடி கடைல எவ்வளவு வேணம்னாலும் கடன் வாங்குவேன்

நகையை வெச்சாதானே கடன் கொடுப்பாங்க மனசை வெச்சாக் கூடவா கொடுப்பாங்க ?

=========

6. எதிர்க்கட்சித் தலைவரிடம் நம்ப தலைவர் சூடான கேள்வின்னு போட்டிருக்கே.. அப்படி என்னா கேட்டாரு .

இன்னிக்கு எவ்வளவு டிகிரி வெயில்னு கேட்டாரு

=========

7. நடிகையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது நல்லதா போச்சு

எப்படி

அவ கோபமா கத்தும் போது “டேக் ஓகே” ன்னு நான் சொல்லிட்டா ரிலாக்ஸ் ஆயிடுறா.


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா?

இப்போதைக்கு சின்ன வீடு போதும்னு ஜோசியர் சொன்னார்..

பிட்டு - 74

1. டாக்டர் அந்த 10-ம் நம்பர் பேஷண்ட் தெர்மாமீட்டரை முழுங்கிட்டாரு

அப்படியா ஒரு ஸ்கேன் எடுத்து தெர்மாமீட்டர்ல என்ன டெம்பரேச்சர் காட்டுதுன்னு பார்த்துடுங்க

==========

2. சர்வர் .. .. எல்லா டேபிள்லயும் ஒரு அயர்ன்பாக்ஸ் இருக்கே எதுக்கு ?

தோசை சூடு பத்தலைன்னா அயர்ன் பண்ணிக்கலாம்

==========

3. உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?

நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா

==========

4. சின்ன ஆபரேஷன்தான் பயப்பாடதீங்கனு நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க

பரவாயில்லையே...

ஆறுதல் சொன்னது எனக்கு இல்லை ஆபரேஷன் பண்ணப் போற டாக்டருக்கு

==========

5. எங்க அப்பா இனிமே என்னைத் தண்டச்சோறுன்னு திட்ட முடியாது

ஏன் எங்கேயாவது வேலைக்குப் போறியா ?

இல்ல வீட்டுல இப்பல்லாம் டிபன்தான் சாப்பிடறேன்

==========

6. எல்லாரும் காதலிக்கு வளையல் சுண்டல்னு வாங்கித் தருவாங்க நீங்க மட்டும் ஏன் தேங்கா பழம் ஊதுபத்தி வாங்கிட்டுவரீங்க ?

எங்க காதல் தெய்வீகமானதாச்சே

==========

7. இந்தப் பிச்சைக்காரனை எதுக்கய்யா இங்க அழைச்சிட்டு வந்திருக்கே ?

வோட்டு கேட்கப் போகும்போது தொகுதி முழுக்க அறிமுகமான ஒரு நபர் கூட வரணும்னு நீங்கதானே சொன்னீங்க

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. இல்லத்தரசி: ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை ?

வேலைக்காரி: நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.

பிட்டு - 73

1. உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார் ..

சீ.. .. சீ .. .. அவன் பிடிக்கறதுக்கு முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்

==========

2. டாக்டர், நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.

அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.

==========

3. உங்க ஊர்ல இவ்வளவு தண்ணி கஷ்டமா ?

ஏன் கேட்கறீங்க ?

ஒட்டல்ல காசு இல்லாம தண்ணி குடிச்சதுக்கே மாவாட்ட சொல்லிட்டாங்க

==========

4. அதோ போறாங்களே அவங்ககிட்ட நிறைய விடியோ காஸெட், காமிரா எல்லாம் இருக்கு

விடியோ கடை வெச்சு இருக்காங்களா ?

ஊஹூம் ஆசிரமம் வெச்சு நடத்தறாங்க

==========

5. அந்த ஆசிரமத்துல இருக்கிற நாய் ஏன் பயங்கரமா குரைக்குது ?

அதுவா யாரோ நிஜ சாமியார் உள்ளே நுழைஞ்சிருக்காராம் அதான்

==========

6. யுவர் ஆனார் என் சார்பா வாதாட வக்கீல் யாரும் இல்லை

அதுக்காக .. .. ?

நீங்களாவது என் சார்பா தீர்ப்பு சொல்லக்கூடாதா ?

==========

7. தண்ணியில் வாழும் உயிரினம் மூன்று கூறு ?

தவளை., மீன், எங்கப்பா

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு

8. என் கணவருக்கும் எங்க வீட்டு வேலைக்காரிக்கும் தொடர்பு இருக்குமோனு சந்தேகமா இருக்கு.

எதை வைச்சு அப்படிச் சொல்றே ?

நான் என் கணவரைத் திட்டினா ”மனசை சரியில்லை” ன்னு அன்னிக்கி லீவு எடுத்துக்கிட்டு போயிடுறான்னா பாருங்களேன்.

==========

பிட்டு - 72

1. அந்த காதல் ஜோடிக்கு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சு ஏட்டைய்யா..

ஏன் சார்..

இப்போ வளைகாப்பு பண்ணி வையுங்கன்னு வந்து நிக்கிறாங்க.

=========

2. .உங்க கணவருக்கு எங்காவது ஓடிப்போகனும்னு போல தோணிக்கிட்டே இருக்காம்.. கவலைப் படாதீங்க.. குணப்படுத்திடலாம்..

சரி பண்ணமுடியுமான்னு பாருங்க.. இல்லை.. என்னையும் இழுத்துட்டு ஓடறமாதிரி மருந்து குடுங்க.

=========

3. என் சம்பந்தி அரைகுறையா எதையோ தெரிஞ்சுக்கிட்டு என் பொண்ணுக்கு வைரஸ் கல் மூக்குத்தி ஒண்ணு செஞ்சி போட சொல்றாராம்..

=========

4. அடுத்ததாக நம் தலைவர் கட்சியில் துரோகம் செய்த சில முக்கிய புள்ளிகளை மேடையிலிருந்து தூக்கியெறிய இருப்பதால் அருகில் அமர்ந்துள்ள அணைவரும் சற்று தள்ளி அமர்ந்து

கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

==========

5. அவன் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு பண்ணினான். விஷம் அருந்தலாமா.. தூக்கில் தொங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு, கடைசியில்.. ரெயில் முன்

பாய்வதுதான் சரியான ஐடியாவாக தோன்றியது..

தெரிந்தவர்கள், நண்பர்கள் எல்லாருக்கும் தன் முடிவைச் சொல்லிவிட்டு, ஒரு நாள் சாயந்திரம் ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளோடு புறப்பட்டான். அத்தனை மூட்டைகளிலும் சிக்கன், மட்டன்

என்று அசத்தலான சாப்பாட்டு அயிட்டங்கள்

பார்த்தவர்கள் வியந்தார்கள்.

ஆமா.. ரெயில்ல பாய்ஞ்சு தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு சொல்றே.. அப்புறம் எதுக்கு இத்தனை சாப்பாடு மூட்டைகள்?

அவன் சொன்னான்.. சரியாப் போச்சு போங்க..அந்த வௌஸ்தை கெட்ட ரயில் லேட்டா வந்துச்சுன்னா, பசியிலேயே நான் செத்துடமாட்டேனா?

==========

6. எதுக்கு தூங்கிக்கிட்டிருக்கிற உன் கணவரை அலாரத்தை எடுத்து அடிச்சே ?

அலாரம் அடிச்சாத்தான் அவர் எழுந்திரிப்பாரு.

==========

7. பால்காரரை காதலிக்கிறதா சொன்னே .. ஆனா அவர் லாண்டரிகாரராச்சே

ஆமாண்டீ வெளுத்ததெல்லாம் பாலுன்னு நெனச்சுட்டேன்.


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. ராப்பிச்சையை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சா .. ஏன் ?

நைட் ஆனா கௌம்பிடுறாரு.

பிட்டு - 71

1. வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?

கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்

=========

2. பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?

மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்

==========

3. பக்கத்து வீட்டுப் பங்கஜத்திடம் பேசிவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துடறேன்

அஞ்சு நிமிஷத்தில் வந்திடுவியா?

ஆமாங்க, நீங்க அரை மணிக்கு ஒரு தரம் அடுப்பில் இருக்கறதை கிண்டிவிட்டுடுங்க

==========

4. அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.

நிஜமாவா .. ?

ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.

==========

5. பரீட்சை அறையில் ஏண்டா தூங்கினே ?

பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க

==========

6. வெயில் காலம் வந்தால் உனக்குப் பைத்தியம் பிடிக்குமாமே உண்மையா?

எந்த நாய் அப்படி சொல்லிச்சி...

=========

7. உங்க படத்துல இடைவேளையப்போ தேவையில்லாம் ஒரு குண்டு வெடிப்புக் காட்சி வருதே எதுக்கு?

நல்லா தூங்கிட்டிருக்கிற எல்லோரையும் எழுப்பி விடத்தான்..

========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. டாக்டர் 22-ம் நம்பர் ரூம்ல வச்சிருந்த பாடியைக் காணல.. டாக்டர்..

சரி சரி கவலைப் படாதே புதுசா ஒண்ணு நானே வாங்கித் தரேன்..

பிட்டு - 70

1. ஊசியை எங்கே போட்டுக்கறீங்க ?

சட்டைப் பையில போடுங்க டாக்டர் பத்திரமாயிருக்கும்.

==========

2. உங்க பையன் அவங்க அம்மாவை மம்மின்னு கூப்பிடறான், உங்களை கம்மி-ன்னு கூப்பிடறானே ஏன் சார் ?

வீட்ல எனக்கு பவர் ரொம்ப கம்மியாம் அதான் குத்திக்காட்றான்

==========

3. தலைவரே, தொண்டர்கள் கூட்டமா இருக்கிறப்ப ஆட்டோகிராஃப் போடாதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா ?

ஏன் இப்ப என்னாச்சு ?

கூட்டத்தோடு கூட்டமா எவனோ ஒருத்தன் உங்க செக்புக்குல கையெழுத்து வாங்கிட்டான்.

==========

4. தூர எது இருந்தாலும் தெரிய மாட்டேங்குது டாக்டர்.

அப்ப கிட்டப்போய் பாருங்க.

நிலாவையெல்லாம் எப்படி டாக்டர் கிட்டே போய் பார்க்க முடியும் ?

==========

5. நான் எடுத்துட்டுருக்கற சினிமாப் படத்தோட டைட்டில் ரொம்ப வித்தியாசமானது.

அப்படி என்ன டைட்டில் வச்சிருக்கீங்க?

நான் தான் சொன்னேனே .. .. ”ரொம்ப வித்தியாசமானது”-ன்னு.

==========

6. என்னதான் லோ பட்ஜெட் படம்னாலும் இப்படியா ?

என்ன ஆச்சு .. ?

காதல் தோல்வியிலே கதாநாயகி சைக்கிள் முன்னாலே விழுந்து தற்கொலை பண்ணிக்கிறாளாம்

==========

7. உப்பில்லாப் பண்டம் குப்பையிலேன்னு யாராவது சொன்னா எனக்குப் பத்திகிட்டு வரும்.

எம்பா ?

ஏன் தூக்கி எறியணும் உப்பைப் போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே

==========


இன்றைய மெகா ஜோக்:

8. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.

அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாளே

பிட்டு - 69

1. ஆபரேஷன் வேண்டாம்னு திரும்ப வார்டுக்கே அழைச்சிட்டு போறீங்களே ஏன் டாக்டர் ?

நீங்க அதிர்ஷ்டகாரர் நான் எதிர்பார்த்த பணம் வேறு இடத்திலே இருந்து கிடைச்சிடுச்சு!

==========

2. தட்டு போட்டு உட்கார்ந்த உடனே என் கணவருக்குச் சாப்பாடு போட்டுடணும் இல்லைன்னா ரொம்பக் கோபம் வரும் ..

ஏன் ?

கஷ்டப்பட்டு சமைச்சு வெச்சிற அவருக்கு இதுகூடப் பண்ணலைன்னா பின்ன கோபம் வராதா ?

==========

3. நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?

ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.

==========

4. உங்க மாமியார் தனக்கு தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்டே சொல்லலியா ?

ஆமாம் சொன்னா எங்க நான் சந்தோஷப்பட்டுடுவேனோன்னு வயித்தெரிச்சல் ..

==========

5. டாக்டர் என் கணவருக்கு ஞாபகமறதி வியாதி அதிகமா போச்சு ..

ஏன் .. .. ?

அவருதான் டாக்டர் சமையல் பண்றாரு ஆனா சாப்பிடும்போது சமையல் நல்லா இல்லைனு என்னைத் திட்டுறாரு.

==========

6. சுண்ணாம்புக்குப் பதிலா டிஸ்டெம்பர் பயன்படத்தாலாம்னு அந்த ஆளுகிட்டச் சொன்னியா .. .. ?

ஆமா ஏன் ?

அங்கே பாரு வெத்தலைக்குக்கூட சுண்ணாம்புக்குப் பதிலா டிஸ்டெம்பர் தடவுறாரு.

==========

7. நம்ம தலைவரு இப்பல்லாம் மேடையில வடநாட்டுத் தலைவர்களோடு ரெண்டு கைகளையும் தூக்கி போஸ்கொடுகடகிறதையே விட்டுட்டாரு தெரியுமா ?

ஏன் ?

போனவாரம் இப்படி நடந்த கூட்டத்துல போஸ் கொடுக்கறப்ப அவரோட வேட்டி அவுந்து போச்சு.


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. கண்ணா உன்கூட விளையாட தம்பிப் பாப்பா வேணுமா, இல்லை, தங்கச்சிப் பாப்பா வேணுமா ?

எனக்காக நீங்க கஷ்டப்பட வேண்டாம் டாடி .. .. நான் எதிர்வீட்டுப் பாப்பா கூட விளையாடிக்கிறேன்.

பிட்டு - 68

1. இந்த டாக்டருக்குச் சொந்தமா ஒரு ஸ்கூல்கூட இருக்கு.

இருக்கலாம் .. .. அதுக்காக க்ளினிக்ல அட்மிட் பண்றதுக்குக்கூட இப்படி என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் வைக்கணுமா ?

==========

2. மனைவி : நேத்து ராத்திரி கனவுல நீங்க எனக்கு நிறைய நகை வாங்கித் தந்தீங்க தெரியுமா?

கணவன் : ஓ! ஞாபகம் இருக்கே. உங்க அப்பா கூட அதுக்குப் பணம் கட்டினாரே!

==========

3. டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.

ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?

==========

4. ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?

ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.

நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?

ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.

==========

5. காதலன் : "கண்ணே, நம்ப காதலைப் பத்தி யார் கிட்டேயும் சொல்லிடாதே!”

காதலி : "மூளையில்லாதவன்கூட உன்னை காதலிக்க மாட்டான்னு சொன்ன ராதாகிட்ட மட்டும் சொல்றேனே!.''

==========

6. கணவன் : "உனக்குத்தான் 2 கண்ணும் நல்லா இருக்கே, ஒழுங்கா அரிசில இருந்து கல்லைப் பொறுக்க மாட்டியா?''

மனைவி : "உங்களுடைய 32 பல்லும் நல்லாதானே இருக்கு. 2,3 கல்லை கடிச்சு சாப்பிட முடியாதா?''

==========

7. வள்ளுவருக்கு வளையல், மோதிரம் நெக்லஸை விட தோடு, தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்குமா எப்படி ?

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

==========


இன்றைய மெகா ஜோக்:

8. அந்த தம்பதிக்கு திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. கணவனது அறுபதாவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது ஒரு தேவதை. ”உங்களின் இணைபிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன் எனது அன்பு பரிசாக ஆளுக்கொரு வரம் தருகிறேன் கேளுங்கள்” என்றது.

மனைவி கேட்டாள் ”இத்தனை காலம் எங்கள் வாழ்க்கை ஏழ்மையிலேயே கழிந்துவிட்டது. அடுத்த ஊரைக்கூட பார்க்க இயலாத பரிதாப நிலைமையிலேயே இருந்துவிட்டோம் உலகம் முழுக்க நாங்கள் சுற்றிப் பார்க்க உதவி செய்தாலே போதும்”

கண்களை மூடி கைகளைச் சுழற்றி ”ஜீபூம்பா” சொன்ன தேவதை அடுத்த விநாடியே கைநிறைய விமான டிக்கெட்டுகளை வரவழைத்துத் தந்தது. இப்போது கணவனின் முறை. மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடி தயங்கித் தயங்கிக் கேட்டான், “என்னைவிட முப்பது வயது குறைந்த பெண்ணுக்கு நான் புருஷனாக வேண்டும்”

அவனது விபரீத ஆசையைக் கேட்டு திடுக்கிட்ட தேவதை சற்றே யோசித்து கண்களை மூடி கைகளைச் சுழற்றி ”ஜீபூம்பா” சொன்னது. அவன் தனது மனைவியைவிட முப்பது வயது கூடுதலான குடுகுடு கிழவனாக மாறியிருந்தான்.

பிட்டு - 67

ராணுவ நகைச்சுவை


அது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின்

மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள்.

அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப்

பொடியாக்கி விடுவோம்”

*****

ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்.

ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"

தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!"

*****

கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். பல ஆண்டுகள் பல நாடுகளுடன் போரிட்டு அவர்களுக்கு யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்பதிலேயே குழப்பம்

இருந்தது. கமாண்டர் ஒரு வீரனைக் கூப்பிட்டு, "ஒரு அமெரிக்கன் ஒரு ரஷ்யன் இருவரைப் பார்த்தால் முதலில் யாரைச் சுடுவாய்?" என்று கேட்டார்.

இப்போது அமெரிக்கா விரோதியா, இல்லை.. ரஷ்யா விரோதியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருந்த அந்த வீரன் "ரஷ்யனை" என்றான்.

கமாண்டர், " நீ ஒன்றுமே தெரியாத முட்டாளாயிருக்கிறாயே! நான் உனது இடத்தில் இருந்தால் அமெரிக்கனைத்தான் கொல்வேன்" என்றார்.

அந்த வீரன், "அப்படியே இருந்தாலும் நான் கொல்வதற்கு அந்த ரஷ்ய வீரன் இருப்பான்.. இல்லையா?" என்று அப்பாவித்தனமாகச் சொன்னான்.

*****

ஒரு முறை ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தாரும் ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவும் தத்தமது நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் விவாதித்துக்

கொண்டிருந்தார்கள்.

ரஷ்ய அதிபர், "சோவியத் வீரர்கள்தான் சிறந்தவர்கள். சோவியத் வீரன் முதலில் சிந்திக்கிறான், பிறகு செயல்படுகிறான்" என்று கூறினார்.

ஹங்கேரி அதிபர், "இல்லை.. இல்லை. எங்கள் நாட்டு வீரர்கள்தான் சிறந்தவர்கள். எங்கள் வீரர்கள் முதலில் செயல்படுவார்கள், பிறகுதான் சிந்திப்பார்கள்" எனக் கூறினார்.

அவர்கள் இருவரும் இப்படியே விவாதித்துக் கொண்டிருக்க, இரண்டு நாட்டு வீரர்களையும் அழைத்து சோதித்துப் பார்த்துவிடுவது எனப் பந்தயம் கட்டினார்கள்.

பிரஸ்னேவ் தனது வீரனை அழைத்து, "வீரனே, இதோ இங்கிருப்பது ஹங்கேரிய ஜனாதிபதி ஜனோஸ் கத்தார். அவரை சென்று தாக்கு" என்றார். சோவியத் வீரன் சற்றே யோசித்து, "இல்லை,

என்னால் நம் நாட்டு நண்பரைத் தாக்க முடியாது" என்றான். ஹங்கேரிய ஜனாதிபதி தனது வீரனிடம் "இதோ, இங்கிருப்பது சோவியத் அதிபர் ப்ரெஸ்னேவ். அவரை உடனே சென்று பலமாகத்

தாக்கு" என்றார். அந்த வீரனும் சற்றும் யோசிக்காமல் உடனே பிரஸ்னேவை பலமாகத் தாக்கியதில் அவர் சற்று தள்ளிக் கீழே விழுந்தார்.

அந்த வீரன் கதவு வரை சென்று ஏதோ சிந்திக்கத் தொடங்கினான். தான் பந்தயத்தில் வெற்றி பெற்றோம் என்ற களிப்பில் இருந்த கத்தார், அந்த வீரன் போகாமல் இருப்பதைப் பார்த்து, "ஏன்

நிற்கிறாய் போகாமல்? என்ன சிந்தனை உனக்கு? என்னைப் பந்தயத்தில் ஜெயிக்க விடமாட்டாய் போலிருக்கிறதே" என்றார் எரிச்சலுடன்.

அந்த வீரன் சொன்னான், "இல்லை.. தாக்கியது போதுமா அல்லது உதைக்கவும் வேண்டுமா" என்றுதான் யோசிக்கிறேன் என்றான்.

*****
ஒரு ரஷ்ய உளவு விமானம் அலாஸ்கா அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலுள்ள விமான ஓட்டியை அமெரிக்க ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர். விசாரணை செய்த அமெரிக்க அதிகாரி

ரஷ்ய விமான ஓட்டியிடம், ரஷ்யப் போர் விமானம் மிக் 29ஐப் பற்றி விளக்கிக் கூறுமாறு கேட்டார். எத்தனை முறை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அந்த விமான ஓட்டி தனக்குத் தெரியாது

என்றே பதிலளித்தான். அடித்து உதைத்துக் கேட்டும் பிரயோசனமில்லை. அமெரிக்கர்களே களைத்துப்போய் அந்த விமான ஓட்டியை ரஷ்யாவிற்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

ரஷ்யா சென்ற அவன் தனது சக விமான ஓட்டிகளிடம் சொன்னான். "மிக் 29ஐப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அது தெரியாமல் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டால் நன்றாக

உதை வாங்க வேண்டி வரும். எனக்கு அது பற்றி தெரியாததால் என்னை நொறுக்கியே விட்டார்கள்"

பிட்டு - 66

1. இந்த மருந்தை தினமும் காலையில வெறும் வயித்துல சாப்பிடுங்க.

பனியன்கூடப் போட்டிருக்கக்கூடாதா டாக்டர் ?

==========

2. அவசியம் இருந்தால்தான் உங்களுக்கு டெஸ்டெல்லாம் எடுக்க வேண்டியது இருக்கும்

அது எப்ப தெரியும் டாக்டர் ?

லேப் வெச்சிருக்கிற என் தம்பி போன் பண்ணுவான்.

==========

3. நேற்று நான் வந்தப்போ நீங்க இல்லை, உங்க கம்பவுண்டர்தான் மருந்து கொடுத்தார்

ஐயையோ.. . என்ன ஆச்சு ?

ஒரே வேளையில குணமாயிடுச்சு

==========

4. என் மாமியார் வந்த ஆட்டோ கவுந்துடுச்சு.

ஐயையோ.. . அப்புறம் என்ன பண்ணே ?

ஆட்டோகாரனுக்கு மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுத்தேன்.. .

==========

5. நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பியிருப்பாரோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.

ஏங்க வீணா அவர்மேல பழியைப் போடுறீங்க.. .?

பின்ன என்ன.. . வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை எடு-னு திருடன் கரெக்ட கேட்டானே.

==========

6. சட்டசபையில் பக்கத்துல உட்கார்ந்திருக்கிற எம்.எல்.ஏ.க்கள் கூட தொணதொண-ன்னு தலைவர் பேசிக்கிட்டே இருக்காரே, என்ன விஷயம் ?

சட்டசபையில் தலைவர் பேசவே இல்லை-ன்னு யாரும் சொல்லிடக்கூடாதுங்கறதுக்காகத்தான் இப்படிப் பேசிட்டிருக்காரு

==========

7. தலைவர், தன்னோட மாமாவும் தாத்தாவும் சுதந்திரப் போராட்ட வீரர்கள்-னு சொல்றது நிஜமாய்யா ?

அவர் சொல்றது, நேருவையும், காந்தியையும்யா

==========

இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. கணவன்: என்னைக்கேட்டு யாராவது போன் பண்ணினா ”நான் வீட்டில இல்லை”ன்னு சொல்லிடு.

மனைவி: சரிங்க

அப்புறம் ஒரு போன் வந்தது. மனைவி போனை எடுத்து, “அவர் வீட்டில இருக்கார்”னு சொல்லிட்டாங்க.

கணவன்: நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்றே, நான் தான் வீட்டில இல்லைன்னு சொல்லச் சொன்னேன்ல

மனைவி: சும்மா கத்தாதீங்க. இது எனக்கு வந்த கால்.

பிட்டு - 65

1. என்ன டாக்டர், திடீர்னு கண்ணை மூடிக்கிட்டீங்க ?

பார்வை நேரம் முடிஞ்சிடுச்சு போயிட்டு நாளைக்கு வாங்க

==========

2. உங்க வீட்டுக்கு பின்னால இருக்கிற பெரிய கிரவுண்டு யாருது ?

அதெல்லாம். என்னோடதுதான்

உங்களுக்குப் பெரிய பேக்கிரவுண்டே இருக்குன்னு சொல்லுங்க

==========

3. உங்க பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க.. ரொம்பத் திமிரா பேசுறான்

என்ன பேசினான் ?

ஏண்டா ரெண்டு நாளா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டான்.. . மதியாதார் தலைவாசல் மிதிக்க வேணாம்-னு நீங்கதானே சொன்னீங்கங்கறான்

==========

4. சரக்கு மாஸ்டர் தேவைங்கற விளம்பரத்தைப் பார்த்துட்டு அப்ளிகேஷன் போட்டியே, என்ன ஆச்சு ?

அங்கே போனப்புறம்தான் சொல்றாங்க, கள்ளச் சாராயம் காய்ச்சணும்-னு

==========

5. வானம் கூட குடிக்கும் போலிருக்கு.. .பின்ன இன்றும் வானம் தெளிவாக இருக்கும்-னு ரேடியோல சொன்னாங்களே.. .

==========

6. அந்த நடிகருக்குக் கொஞ்சம்கூட டான்ஸ் ஆட வராதே.. . உங்க படத்திலே மட்டும் இவ்வளவு பிரமாதமா ஆடறாரே.. . எப்படி ?

அவரோட மனைவியைக் கூட்டி வந்து எதிரில் நிறுத்தினோம். அவர் உடம்பு தன்னாலே ஆட ஆரம்பிச்சுட்டது.

==========

7.வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது

சும்மா அளக்காதே.. .

உண்மையாதான் சொல்றேன்.. . எந்த மாடாவது மூக்குக்கண்ணாடி போட்டிருக்கா ?

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. காதலில் சைவம், அசைவம்னு ரெண்டு வகை இருக்கு. உதாரணம் சொல்லு பார்ப்போம்.

கதாநாயகி தொப்புளில் ஹீரோ தோசை சுட்டா அது சைவம். ஆம்லெட் போட்டா அது அசைவம்.

பிட்டு - 64

1. அந்தக் காலத்துல ஏன் தட்டுங்கள் திறக்கப்படும்-னு சொல்லியிருக்காங்க ?

அப்பா காலிங்கெல் கிடையாது.. . அதான்

==========

2. டெலிபோனை எடுத்து என்னனு கேளு, போ

டெலிபோன் அடிக்கலையே அத்தை

ஆமா.. . அது அடிக்கிற வரைக்கும் காத்திருக்கணுமா ? நீயே போய் எடுத்தா குறைஞ்சு போயிடுவியாக்கும் ?

==========

3. தெரியாத்தனமா, பூசணிக்காய் வியாபாரம் செய்யறவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டேன்.

சமையல்ல பூசணிக்காயா ?

அதில்ல. தாம்பூலப் பையில் ஆளுக்கொரு பூசணிக்காய்.. .தூக்கிட்டு வந்ததில் ரெண்டு கையும் செம வலி

==========

4. நேத்து எங்க தலைவர், தொகுதிக்கு குறை கேட்கப் போயிருந்தப்ப ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சூழ்ந்துக்கிட்டு குரைக்க ஆரம்பிச்சிட்டுது

அப்படின்னா உங்க தலைவர் தொகுதிக்கு குரை கேட்கப் போனார்-னு சொல்லு.

==========

5. தலைவர் பேசும்போதெல்லாம் ரெண்டு மைக் வைக்கிறாங்களே.. . ஏன் ?

அவருக்கு ரெட்டை நாக்காம்

==========

6. பொண்ணு போட்டோவை மாப்பிள்ளைகிட்ட ஆபீஸ்ல கொண்டு போய்க் காட்டினது தப்பாப் போச்சு

ஏன் ?

தூக்கக் கலக்கத்துல இருக்கிறப்ப என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்றாரு

==========

7. கமல் ரசிகையை காதலிச்சது நல்லதாப் போச்சு

ஏன் ?

நான் முத்தம் கேட்கறதுக்குள்ள அவளே குடுத்துடறா.


இன்றைய மெகா பிட்டு ஜோக்:


8. சார்.. . இன்னைக்குக் குலுக்கலை வாங்கிட்டுப் போங்க.. காலையிலே யோகலட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப்போறா!

யோவ். .. போனவாரம் நான் தனலட்சுமி வீட்டுக் கதைவைத்தட்ன விவகாரமே இன்னமும் தீரலை.. .

பிட்டு - 63

1. சார்.. .இந்தப் புடவை லேட்டஸ்ட் மாடல்.. . கட்டினா சூப்பரா இருக்கும்.

அதெல்லாம் முக்கியமில்லே.. . துவைக்கிறதுக்கு ஈசியா இருக்குமான்னு சொல்லுங்க.

==========

2. ஆஸ்பத்திரிலேர்ந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த எங்க அம்மா மயக்கம் போடுற அளவுக்கு என்ன சொன்னே ?

நீங்க நல்லபடியா உடம்பு குணமாகி வந்தா, முருகனுக்கு உங்களை அலகுக் காவடி எடுக்க வைக்கிறதா வேண்டிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன். அவ்வளவுதான்.

==========

3. என் கணவருக்கு நான்தான் சார் உலகமே.

அதான் உலகம் எப்ப அழியும்ன்னு அடிக்கடி எல்லாரையும் கேட்டுக்கிட்டிருக்காரா ?

==========

4. எனக்குச் சர்க்கரை வியாதி.. . டாக்டருக்கே ஆயிரம் ரூபாய் செலவாகிடுச்சு.

ஆச்சரியமா இருக்கு.. . உனக்கு வந்த சர்க்கரை வியாதிக்கு டாக்டருக்கு ஏன் ஆயிரம் ரூபாய் செலவாச்சு ?

==========

5. நேத்து நைட் எங்க வீட்டுக்கு வந்த திருடன் ரொம்ப அமைதியான கேரக்டர் போல.

எப்படிச் சொல்றே ?

அவன் வந்ததும் தெரியலை போனதும் தெரியலை. அப்படி காம் டைப்.

==========

6. என் கடைசித் தம்பிகிட்ட நேத்து படி படி-ன்னு சொன்னேன்.. . கேட்காம .

என்ன.. . ஃபெயில் ஆயிட்டானா ?

ம்ஹூம். .. மாடிப்படியில தடுக்கி விழுந்து காலை ஒடிச்சுக்கிட்டான்.

==========

7. அந்த டாக்டர் போலி டாக்டர்-னு எப்படி கண்டுபிடிச்சிங்க.

எலும்பு உடைஞ்சிருக்கு.. . உடனே போய் பெவிகால் வாங்கீட்டு வாங்க, அப்படின்னு சொல்றாரு.

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. வாங்க சார். டாக்டர் இல்லீங்களே.. . வெளில போயிருக்கார்.

சரி.. . பரவாயில்லை. நர்ஸைக் கூப்பிடுங்க வந்ததுக்கு அவங்களையாவது பார்த்துட்டுப் போயிடறேன்.

==========

பிட்டு - 62

1. அடியே நான் சாமியார் ஆகிவிட்டேன்

சரி, இப்பவாவது நாலுகாசு சம்பாதிக்கப் பாருங்க.. .

==========

2. இன்னைக்கு ஸ்டேஷனில் ஒரு கேஸைத் துருவித் துருவி விசாரிச்சேன்

அதெல்லாம் கிடக்கட்டும்.. . முதலில் தேங்காயைத் துருவுங்க.. . அப்புறம்தான் சாப்பாடு.. .

==========

3. நாட்டு வைத்தியரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுத் தவிக்கிறேன் ?

ஏன் ?

தலைக்கு வேப்பம்-பூ வாங்கிட்டு வந்து வச்சுக்கச் சொல்றாரு.

==========

4. என்னது, அவர்கள் ஹைடெக் காதலர்களா ?

ஆமாம், முன்பு பனகல் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவங்க. இப்போது டைடல் பார்க்குக்கு வந்துட்டாங்களே. .

==========

5. டாக்டர், எனக்கு அடிக்கடி கழுத்துவலி வருது.. .

பொண்டாட்டியைத் தலைல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடினா.. . இப்படித்தான்.

==========

6. அந்த ஆள் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க.. .?

பின்ன .. என்னோட ப்ளட்ல யூரியா நிறைய இருக்கு.. . அதனால தலைமுடி நல்லா வளரும்னு சொல்றாரே..

==========

7. டாக்டர், ஒரு வாரமா பின்னாடி தலைமுடி ஒரே கொட்றது.. .

முன்னாடி எப்பவாவது இது மாதிரி கொட்டியிருக்கா. ?

இல்லே டாக்டர்.. . பின்னாடி தான் கொட்டியிருக்கு..

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. நேத்து நடந்த கல்யாணத்துல தலைவர் மானத்தை வாங்கிட்டார்

என்னாச்சி?

திருமணத்தை நடத்தி வைத்த நான், சாந்தி முகூர்த்தத்தையும் நடத்திவைத்து மணமக்களை சந்தோஷப் படுத்துவேன்னு மைக்கில பேசிட்டாரு.

பிட்டு - 61

1. என்ன உங்க பையன் உங்களையே கோவிந்தான்னு கூப்பிடுறான் ?

நான்தான் சொன்னேனே பேர் சொல்ல ஒரு பிள்ளை இருக்கான்னு...

==========

2. போர் முழக்கம் செய்தாயிற்று. .. இன்னும் படை வீரர்கள் போருக்குக் கிளம்பவில்லையே. .. ஏன் ?

அவர்களது உயிருக்கு நாம் இன்னும் இன்ஷூரன்ஸ் எடுத்துத் தராததால் ஸ்டிரைக் செய்கிறார்கள் மகாராஜா.

==========

3. மூத்தவனான உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே, உன் தம்பிக்குக் கல்யாணம் ஆயிடுச்சாமே ?

அவன் பஸ் டிரைவர். ஓவர் டேக் பண்ணியே பழக்கம்.

==========

4. அவனை நாயேன்னு திட்டினது தப்பாப் போச்சு.

ஏன், என்ன ஆச்சு ?5. இப்ப டெலிபோன்ல நீங்க உங்க மனைவிகிட்டேதானே பேசினீங்க ?

ஆமாம் எப்படிக் கண்டு பிடிச்சீங்க ?

தலையை ஆட்டிக்கிட்டே பேசினீங்களே.. .

==========

6. என்னங்க.. . நானும் 3 மாசமா நாய் மாதிரி கத்திக்கிட்டுக் கிடக்கேன். கழுத்துக்கு ஒரு செயின் வாங்கித் தரக்கூடாதா ?

==========

7. ஆபரேஷன் முடிந்து மறுபடியும் செக்கப்புக்கு வரணுமா டாக்டர் ?

அதுக்கெல்லாம் அவசியமே இருக்காதுங்க.

==========


அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. அந்த டைரக்டர் என்ன, நடிகையோட வயித்தையே பார்த்துக்கிட்டு இருக்காரு.. ?

தொப்புள் காட்சி எடுக்க லொகேஷன் பார்க்கறாரு.. .

பிட்டு - 60

1. மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்

கணவன் : ரொமப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்

==========

2. கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

==========

3. மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?

கணவன் : ஏன் உனக்கு சொல்லணும்?

மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.

==========

4. கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி " அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".

பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டேயே"

பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்

பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டேயே

பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.

பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால உன்னை என்னொட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.

==========

5. பேய் இருக்குன்னா நம்புற நீங்க, கடவுள் இருக்காருன்னா ஏன் நம்ப மாட்டேங்குறீங்க???

என் மனைவிகிட்டேயிருந்து என்னை காப்பாத்த யாரும் இல்லையே...

==========

6. ஏங்க.. . நம்ம பையனுக்கு உடனே ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அவனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு

எப்படிச் சொல்றே

அவனோட ரூம்ல போய் பாருங்க. . . சமையல் செய்வது எப்படி ?-னு புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கான்.

==========

7. அந்த ஆளுக்கு வைர- வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.

எப்படி ?

இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.

==========


இன்றைய மெகா ஜோக்:

8. மனைவி: என்னங்க... எதிர் வீட்டுக்காரன் என்னை நாய்னு திட்டீட்டான்.

கணவன்: வரட்டும் ராஸ்கல். நாய்னா அவனுக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா?

பிட்டு - 59

1. என்னுடைய கதை என்று ஒருவர், நம் படத்தைப் பார்த்து விட்டு கேஸ் போட்டிருக்கிறார்.

கவலைப்படாதே கேஸ் தோற்றுவிடும். ஏன்னா நம்ம படத்துல கதையே இல்லையே.

==========

2. ஒரு கல்லறைக்கு முன்னர் ஒருவர் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். நீ மட்டும் இறக்காமல் போயிருந்தால் நான் எவ்வளவு நிம்மதியாக இருந்திருப்பேன் என்று அடிக்கடி அரற்றிக் கொண்டிருந்தார். விதியை மட்டும் என்னால் மாற்ற முடியுமேயானால் உன்னைத் தான் உடனே உயிர்ப்பிப்பேன் என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் "ஏன் ஐயா இவர் அவ்வளவு முக்கியமானவரா?" என்று கேட்டார்.

இவரோ, "ஆமாய்யா, ரொம்ப முக்கியமானவர் தான், என் மனைவியின் முதல் கணவன் அவர்!", என்றார்.

==========

3. ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..

கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

==========

4. மனைவி:-

எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன?
அழகான் முகமா!!!
அன்பான மனமா!!!
பணிவான குணமா!!

கணவன் :-"உன்னோட இந்த காமெடிதான்"

==========

5. என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?

அட! என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.

==========


6. கணவன்:- என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே
மனைவி:- கட்டிக்க போறது நாந்தனே
கணவன்:- துவைக்கிறவனுக்குதானே கஷ்டம் தெரியும்

==========

7. இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?

எப்படி சொல்றே?

எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்.........


இன்றைய மெகா ஜோக்:

8. மாலா:- ஏண்டி கீதா நீ ஏன் துவைக்கிற. வாஷிங் மெஷின் எங்க?

கீதா:- அது ஆபீஸ் விஷயமா வெளியூர் போயி்ருக்குடி

பிட்டு - 58

1. டாக்டர்.. . இந்த ஒரு மாசத்துல என் பையன் ஒரு ரூபாய் காயின் பத்து முழுங்கிட்டான்.

இவ்வளவு நாளா ஏன் வரலே. ..?

பத்து ரூபாய் சேரட்டுமேனு பார்த்துட்டு இருந்தேன் டாக்டர்

==========


2. இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சுதான் எதையுமே சொல்ல முடியும்.

ஏன் டாக்டர். .. ரெண்டு மணி நேரம் கழிச்சு வேற யாராவது நல்ல டாக்டர் வர்றாரா .. .?

==========

3. என்னது.. . அரை டிக்கெட் வேணுமா. ..?

ஆமாப்பா. . படத்தோட முதல் பாதிதான் நல்லாயிருக்குன்னு சொன்னாங்க. .. அத மட்டும் பார்த்துட்டுப் போயிடுறேனே ?

==========

4. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்மணி தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. ஷாப்பிங் முடிந்து பணம் கட்ட கேஷ் கௌண்ட்டர் பக்கமாக அவன் முன்னேறியபோது, அந்தப் பெண்மணி குறுக்கே வந்தாள்.

மன்னிக்கணும் நான் உன்னையே பார்த்துக்கிட்டிருந்தது உனக்குத் தர்மசங்கடமா இருந்திருக்கலாம். வேற ஒண்ணும் இல்லை. .. சமீபத்துல செத்துப் போன என் பையன் மாதிரியே நீ இருக்கே என்றாள் அந்தப் பெண்மணி உடைந்துபோன குரலில்.

ஓ.. . ஸாரி, என்ற அந்த இளைஞன், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா. . ? என்று கேட்டான்.

ஒண்ணும் வேணாம். . நான் இப்போ கிளம்பறேன். ஓரே ஒரு வார்த்தை.. போய்ட்டு வாங்க அம்மா-னு சொன்னேன்னா போதும். என் மனசு குளிர்ந்துடும். . என்றாள். அதன்படியே அவள் கிளம்பும்போது போய்ட்டு வாங்க அம்மா என்று உருகினான் அவன்.

வரிசை மெதுவாக நகர்ந்து, கேஷ் கௌண்ட்டருக்கு அவன் போனபோது ஏகப்பட்ட தொகைக்கு ஒரு பில் நீட்டப்பட்டது.

நான் வாங்கியது கொஞ்சம் பொருட்கள்தானே.. . எப்படி இவ்வளவு பில் ? என்று கேட்டவனுக்குக் கிடைத்த பதில் - நீங்க வாங்கினது கொஞ்சம்தான். இப்ப புறப்பட்டுப் போன உங்க அம்மா வாங்கினது எக்கச்சக்கமாச்சே

==========

5. ஒரு விருந்தில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்

நீங்க தப்பான விரல்ல கல்யாண மோதிரம் போட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ..

ஆமா. .. ஏன்னா, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பான ஆளைத்தானே

==========

6. நீங்க வாடகையே ஒழுங்கா தர்றதில்லையே ?

கொஞ்சம் பணக்கஷ்டம்.. . அதான்.. .

அப்ப நீங்க காலி பண்ணிடுங்க. நான் வீட்டை விற்கப் போறேன்.. .

அப்படி ஒரு எண்ணம் இருந்தா சொல்லுங்க.. .. நானே வீட்டை வாங்கிக்கிறேன்.. . .

==========

7. குருகுலத்தில் இளவரசரை சேர்ப்பதில் சிக்கல் வந்திருக்கிறது மகாராஜா.

என்ன விஷயம் ?

கவுன்சிலிங் முறையை இந்த வருடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்களாம்.

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. உங்க கழுத்துல கிடந்த செயின்ல ரவுடி கை வைச்சப்ப நீங்க ஏன் கத்தல ?

அவனோட நோக்கம் அந்த செயின் மட்டும்தான்னு அப்ப எனக்குப் புரியாமப் போச்சு

பிட்டு - 57

1. எனக்கும் என் மாமியாருக்கும் சண்டை நடந்து. இன்னியோட வருஷம் ஆறு ஓடிப்போச்சு

ஆறு வருஷமா உங்களுக்குள்ள ஒரு பிரச்சினையும் கிடையாதா .. .?

இன்னைக்கு அவுங்களோட 8-வது திவசம் டீ!

==========

2. ரொம்ப லோ பட்ஜெட்ல படம் எடுக்கிறhர் போல இருக்கு.

எப்படிச் சொல்றே ?

ஸ்டோரி டிஸ்கஷனுக்கு எல்லோரையும் டீக்கடைக்கு வரச்சொல்லியிருக்கிறாரே.. .*

==========

3. உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே.

நான் உங்களை தர்ம மகாராஜான்னு சொன்னேனே, நீங்க என்ன அப்படியா இருக்கீங்க ?

==========

4. எள்ளுன்னா எண்ணெயோட வந்து நிப்பானே உங்க பையன், இப்ப என்ன பண்றான் ?

வீட்டுல கல்யாணப் பேச்சை எடுத்த உடனே கையில் குழந்தையோட வந்து நிக்கிறான்.

==========

5. ஏண்டா.. . மாட்டுக்கு வாய் மட்டும் வரையாம விட்டிருக்கே

நீங்கதானே சார் சொன்னீங்க அது வாயில்லாப் பிராணினு

==========

6. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிற தலைவர் எதுக்குக் கோபப்படுகிறார் ?

மலர் வளையத்தோட எதிர்க்கட்சிக்காரங்க உள்ளே வந்துட்டாங்களாம்

==========

7. கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?

ஹீ.. . ஹீ.. . தரகரே.. .கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. ஒரு பொம்பளையை டீக்கடை மாஸ்டரா போட்டது தப்பாப் போச்சு.

ஏன் ?

வர்றவங்க எல்லாம் அவகிட்ட ஆடை இல்லாம டீ போடுங்கன்னு கேட்கறாங்க!

பிட்டு - 56

1. என்ன இது சாம்பார்ல பிஸ்கெட் வாசனை வருது

உப்பு தீர்ந்து போச்சு. .. அதனால சால்ட் பிஸ்கட் ரெண்டு போட்டேன்

==========

2. நீச்சல் போட்டியில முதல்ல வந்தவர் ஏன் மெடல் வாங்கறதுக்குத் தண்ணியவிட்டு வெளியே வரமாட்டேங்கறhரு ?

ரெண்டாவதா வந்தவர் வெறுப்புல இவரோட ஸ்விம்மிங் சூட்டை உருவிட்டாராம்

==========

3. உங்க பையன் வருங்காலத்துல பெரிய மெகா சீரியல் டைரக்டரா வருவான்

எப்படிச் சொல்றீங்க ?

பின்னே.. . ஒரு வரியில பதில் சொல்லக் கூடிய கேள்விக்கெல்லாம்கூட பத்து பக்கத்துக்கு விடை எழுதி வெச்சிருக்கானே

==========

4. ஒரு நாள் அதிகாலை. தூங்கிக் கொண்டிருந்த தனது மகனைப் படுக்கையிலிருந்து எழுப்பினார் அந்த அம்மா.

”எழுந்திரு மகனே. .. பள்ளிக்கூடம் போக நேரமாச்சு”

”முக்கல் முனகலோடு லேசாக கண்திறந்து பார்த்த மகன், ம்.. . எனக்குப் பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை”

”சரி, ஏன் பள்ளிக்குப் போகப் பிடிக்கலை.. . ரெண்டு காரணம் சொல்லு ?”

”அதுவா.. . பசங்களுக்கும் என்னைப் பிடிக்கலை.. . வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலை. . போதுமா ?”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை.. . எழுந்திரு. .. பள்ளிக்கூடம் டயம் ஆச்சு”

”சரி, பள்ளிக்கு நான் ஏன் போகணும்கிறதுக்கு நீங்க ரெண்டு காரணம் சொல்லுங்க ?”

”காரணமா.. . ஒண்ணு, உனக்கு 52 வயசாச்சு. .. ரெண்டு, நீ அந்தப் பள்ளிக்கு பிரின்ஸிபால்”

==========

5. ஒரு இருபது ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி

அது என்னய்யா இருபது ரூபாய் கணக்கு ?

அர்ஜெண்ட்டா பிரவுஸிங் பண்ண வேண்டியிருக்கு சாமி

==========

6. இந்த மருந்தைச் சாப்பிடுங்க சரியா போச்சுனா வந்து பாருங்க. ..

சரியாப் போச்சுனா எதுக்கு டாக்டர் வரணும். .?

சரியாப் போச்சுனான்னு நான் சொன்னது மருந்தை.

==========

7. பொண்டாட்டிக்கு குந்துமணி நகைகூட செய்துபோட முடியாத உனக்கெல்லாம் கல்யாணம் எதுக்குடான்னு நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுட்டுப் போறான்.

யாரு. . மாமனாரா ?

ஊகூம், வீட்டுக்கு வந்திருந்த திருடன்


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. என் வீட்டுக்காரர் எங்கேயும் வேலைக்குப் போகலைனாக்கூட அவருக்கு பந்தாவுல ஒண்ணும் குறையில்லை.. .

ஏன் ?

நான் சம்பளம் வாங்கிக் கொடுத்த உடனே போய் மல்லிகைப்பூவும் அல்வாவும் வாங்கிட்டு வந்துடுறாரு

பிட்டு - 55

1. ஒரு மாசமா வர்றீங்களே. . ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் தெரியுதா.. .?

பரவாயில்லை டாக்டர் உங்க நர்ஸ் லதா இப்ப கொஞ்சம் முகம் கொடுத்துப் பேசறாங்க..

==========

2. தலைவரை ரிப்பன் வெட்டி கடை திறக்கச் சொன்னது வாஸ்தவம் தான். அதுக்காக இப்படி அரிவாளோட வருவார்னு யாருமே எதிர்பார்க்கலைங்க.

=========

3. நம்ம ஊருக்கே போலீஸ் ஸ்டேஷன் வரப்போகுதாம்.

அதை ஏன் சந்தோசமா சொல்றே ?

மாமுல் கொடுக்க இனிமே நாம அடுத்த ஊருக்குப் போய் அலைய வேண்டாமே

=========

4. டாக்டர்.. . வர.. வர.. காது சரியாகவே கேட்கமாட்டேங்குது.. .

நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க.. . ரெண்டே நாள்ல காய்ச்சல் சரியாயிடும்.

=========

5. டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.

இந்த டானிக்கை சாப்பிடுங்க.

சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?

நல்லா இருமலாம்.

=========

6. எனக்கு இது முதல் ஆபரேஷன் அதான் ரொம்பப் பயமா இருக்கு.

எனக்கும்தான் இது முதல் ஆபரேசன் நான் எங்கேயாச்சும் பயப்படறேனா ?

=========

7. தலைவர் கலந்துக்கற கூட்டத்துக்கு ஏன் ஒரு நாட்டியக்காரியை நிக்க வெச்சிருக்காங்க ?

மேடைக்கு வந்ததும் தலைவர் அலங்கார வளைவு இல்லையா-ன்னு கேட்பார். .. அதுக்குத்தான்.

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. குருவே. .. என் இரண்டு சம்சாரத்தையும் என்னால சமாளிக்க முடியலை. அதான் ஆசிரமத்துக்கு வந்துட்டேன்.

சிஷ்யா, 2 பொண்ணுங்களையே சமாளிக்க முடியாத நீ. ஆசிரமத்துல இருக்கிற அத்தனை பொண்ணுங்களை எப்படி சமாளிக்கப்போறே ?

==========

பிட்டு - 54

1. எங்க மானேஜருக்கு ஆபீஸ்ல திடீர்னு பெண்டாட்டி ஞாபகம் வந்தா போதும்.. .

உடனே வீட்டுக்கு கிளம்பிடு வாரா.. .?

இல்ல ஆபீஸ்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழுவாரு.

=========

2. போலீஸை ஏன் அரிவாளால் வெட்டுனே ?

சும்மா மாமூலை வெட்டு வெட்டுனு தொந்தரவு குடுத்துட்டு இருந்தாரு மொத்தமா வெட்டிட்டேன்.

==========

3. டீச்சர்: ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.

மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.

==========

4. உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே

==========

5. டேய். .. மரியாதையா பீரோ சாவியை எடு.

எடுக்கறேன். .. முதல்ல பணம் கொடு.

எதுக்கு ?

பீரோ வாங்கத்தான்

==========

6. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு

ஏன் ?

நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.

=========

7. கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?

மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.

=========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. டாக்டர், ரெண்டு நாளா நானும் கவனிச்சிட்டு இருக்கேன். எப்பப்பாரு என் சம்சாரம் கையை டச் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே ?

என் மனைவிக்கு ஆபத்து, கைவிட்டுடாதீங்க டாக்டர்னு நீங்கதானே சொன்னீங்க ?

பிட்டு - 53

1. தேர்தல் பரபரப்பு ஊரெங்கும் உச்சகட்டத்தில் இருந்த சமயம்.. . பக்கத்து ஊரில் வோட்டு வேட்டையாட ஒரு ஸ்பெஷல் பேருந்தில் பயணமாகிக் கொண்டிருந்தது அரசியல்வாதிகள் குழு ஒன்று. எதிர்பாராதவிதமாக அந்தப் பேருந்து ஒரு மரத்தின்மீது மோதி, மிகப் பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு விவசாயி ஓடோடி வந்தார். ஸ்பாட்டை ஒரு வலம் வந்தார். பிறகு என்ன நினைத்தாரோ. .. ஆழமான குழிதோண்டி, விபத்தில் சிக்கிய ஒவ்வொருவரையும் புதைக்க ஆரம்பித்துவிட்டார்.

மறுநாள். .. விஷயமறிந்து வந்த உள்ளூர் போலீஸ் அந்த விவசாயியிடம் கேட்டது. எல்லோரையும் அக்கறையாகப் புதைத்து விட்டீர்கள். .. சரி ஆனால், அந்த விபத்தில் ஒருவர்கூடவா உயிர் பிழைக்கவில்லை ?

விவசாயி சொன்னார். சிலபேர் தாங்கள் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் நமக்குத்தான் தெரியுமே. .. அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் பொய் சொல்வார்கள் என்று!

==========

2. உங்க மாமியாருக்குப் பண்ண ஆபரேஷன்ல ஒரு சின்னத் தப்பு நடந்துடுத்து. ..

என்ன டாக்டர். .. நீங்க பெரிய தப்பு பண்ணுவீங்கங்கிற நம்பிக்கைலதானே உங்ககிட்டே கூட்டிட்டு வந்தேன்.

==========

3. அந்தக் காப்பி கொட்டை கடையில என்ன பி.ஏ. காப்பி, பி.காம் காப்பின்னு போர்டு போட்டிருக்கு ?

டிகிரி காப்பியாம்.

==========

4. என் கணவர் தோசை சுட்டுப் போட்டுக்கிட்டே இருப்பார். எத்தனை-ன்னு கணக்குப் பார்க்கமாட்டார். ..

ஏன் ?

அவருக்குச் சுட்டுப் போட்டாலும் கணக்கு வராது. அதான்.

==========

5. அர்ச்சனை உங்கள் பெயருக்கா. .?

சாமி பெயருக்கே பண்ணுங்க. .. எனக்குத் தினமும் வீட்டில் நடக்குது

==========

6. டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?

மெகா சீரியல் மாதிரி. ..

புரியலையே ?

இழுத்துக்கிட்டே இருக்கு

==========

7. நான் எப்பவுமே மத்தவங்க கையை எதிர்பார்க்க மாட்டேன்

அதுக்குனு நீங்களே என் பாக்கெட்ல கையை விட்டு பணத்தைக் கடனா எடுத்துக்கறது நல்லாயில்லை

==========


இன்றைய சிறப்பு மினி பிட்டு ஜோக்கு:


8. மாறு வேடத்தில் அந்தப்புரத்துக்குச் சோதனைக்குச் சென்றது தவறாகிவிட்டது அமைச்சரே!

ஏன் மன்னா ?

தினமும் மன்னருக்குத் தெரியாமல் வந்து போங்கள் என்று அரசியார் சொல்லிவிட்டார்!

பிட்டு - 52

1. எதுக்கு அந்த வாஸ்து சாஸ்திர ஜோசியரைப் போய் அடிக்கப் போனீங்க. ..?

பின்னே. .. இடதுபக்கம் இருக்கிற இதயத்தை எடுத்து வலதுபக்கம் வெச்சுட்டா நல்ல பணம் வரும்-னு சொல்றாரு.

=========

2. சார். .. நாங்க வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான். ..

ஆச்சரியமா இருக்கே. ..

இதுக்கே ஆச்சரியப்பட்டா.. . போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான் சார்.

=========

3. சாப்பிட்டு முடிச்சவுடனே, உன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே. .. என்னவாம் ?

இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமா ?னு கண்ணீர் மல்கக் கேட்டார்

========

4. நாம ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடப்போற விஷயம் எங்கப்பாவுக்கு தெரிஞ்ச போச்சு. ..

ஐயையோ. .. என்ன சொன்னாரு ?

போறப்ப எங்க அம்மாiவும் கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.

=========

5. பக்கத்து வீட்டுக்காரி நல்லாத்தானே இருக்கா. அப்புறம் ஏன் கழுத்துல சுளுக்குங்கிறா ?

அவ போட்டிருக்கிற வைர அட்டிகையை எல்லோரும் பார்க்கணுமாம். அதான்.

=========

6. கணிப்பொறிக்கும், எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம் .. .?

கணிப்பொறிக்கு மௌஸ் வெளியே இருக்கும். .. எலிப் பொறிக்கு மௌஸ் உள்ளே இருக்கும்.

=========

7. குரைக்கிற நாய் கடிக்காதுன்னு எதவைச்சு சொன்னாங்க ?

தேள் குரைக்கறதில்லை. ஆனா கடிக்குதுல்ல.

=========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8. கார் மெக்கானிக்கைக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு

ஏன் ?

டெய்லி கட்டிலுக்குக் கீழே தான் படுக்கறாரு.

பிட்டு - 51

1. வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறாங்க ?

இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம்

==========

2. ஹோட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சா. .. ஏன் ?

யாராவது பூச்சி மருந்து கேட்டால் சாப்பிடவா, பார்சலா-ன்னு கேட்கிறார்

==========

3. பக்கத்து வீட்டில ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ? எங்க ஆளையே காணும்

பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான்

==========

4. தலைவர் பணத்துக்கெல்லாம் ஃபேர் அன்ட்லவ்லி தடவிக்கிட்டு இருக்காரே, ஏன் ?

அதை தடவினா கருப்பெல்லாம் வெள்ளையாகும்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாரு.

==========

5. கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கிறதுதான் நல்லது.

அது சரி, அதுக்கு பெண்டாட்டி ஒத்துக்குவாளா ..?

==========

6. ஜூனியர் வக்கீலா லேடியை நியமிச்சது தப்பாபோச்சு

ஏன் ?

கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா, குக்கர்ல இருக்கிற இருக்கிற கேஸ் கட்டை கொண்டு வர்றாங்க

==========

7. அவர், ஒரு காலத்துல கோயில்ல சிதறு தேங்காய் பொறுக்கி சாப்பிட்டவராம்

இப்ப என்ன பண்றாரு ?

படிப்படியா வளர்ந்து கோயில் சொத்தையே சாப்பிடுறாரு.


==========


இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:


8. கராத்தே மாஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு ?

என்னாச்சு ?

முதலிரவிலே ஆ- ஊ-ன்னு கத்தி என் மானத்தை வாங்கிட்டாரு

பிட்டு - 50

1. பலசரக்குக் கடை ஆரம்பிப்பதற்காகவா உன்னைக் கைது பண்ணி தண்டனை கொடுத்தார்கள் ?

ஆமாம் - கஞ்சா, அபின், பட்டை, சாராயம் போன்ற பல சரக்குகள் கடை அல்லவா ஆரம்பித்தேன்

==========

2. என்னங்க.. . எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க? போய் பேச வேண்டியதுதானே!

நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்

==========

3. தாத்தாவுக்கு இப்ப எல்லாம் பக்தி அதிகமாகி விட்டது.

அதுக்காக, ரசம் வேண்டாம் பக்தி ரசம்தான் வேண்டும் என்றா கேட்டு அடம் பண்ணறது ?

==========

4. அம்மா தீபாவளி அன்னிக்கு நான் வேலைக்கு வரமாட்டேன். ..

பரவாயில்லை அன்னிக்கு ஐயாவுக்கு ஆபீஸ் லீவுதான். ..

==========

5. தீபாவளிக்கு வந்த படங்கள்லயே உங்க படம் மட்டுந்தான் குடும்பத்தோட பாக்கற மாதிரி இருந்துச்சு

அப்படியா.. . ரொம்ப சந்தோஷம்.. . எதை வைச்சுச் சொல்றீங்க ?

மத்த படங்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல் ஆயிட்டதால, டிக்கெட் கிடைக்கல.. . உங்க படம் காலியாயிருந்ததாலே குடும்பத்தோட பாக்க முடிஞ்சதுன்னு சொல்ல வந்தேன்.

==========

6. தீபாவளிக்கு நாலு நாள் முன்னாடியே உங்க அம்மாவை வரச் சொல்லுங்க.. .

எதுக்குடி.. .?

நம்ப வீட்டு வேலைக்காரி லீவு எடுத்துனு ஊருக்குப் போறாளாம்

==========

7. அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க மாட்டாங்களா ?

அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும் அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப் போறாங்க

==========

இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:


8. செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .

ஏன் ?

இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றான்

பிட்டு - 49

1. கண்ணாடியை கழட்டிட்டா எதுவுமே தெரியமாட்டேங்குது டாக்டர்.. .

நிஜமாவா.. ?

ஆமாம், கண்ணாடியை கழட்டிட்டனா இல்லையான்னு கூட தெரியமாட்டேங்குது டாக்டர்

==========

2. சார் பீரோல வெச்சிருந்த என்னோட மொத்தப் புடவைகளும் காணாம போச்சு..

உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா. .?

தோய்க்கறதுக்கு சோம்பேறித்தனப்பட்டுட்டு என் கணவர்தான் யாருக்காவது எடுத்துக் கொடுத்துட்டாரோன்னு சந்தேகமா இருக்கு.

==========

3. எங்கப்பா வெளியே போறப்ப சட்டை போட்டா பேண்ட் போட மாட்டாரு.. . பேண்ட் போட்டா சட்டை போட மாட்டாரு.. .

ரொம்ப அசிங்கமாயிருக்குமே..

அதெப்படி அசிங்கமாயிருக்கும். .. சட்டை போட்டா பேண்ட்டுக்குப் பதிலா வேஷ்டி கட்டுவாரு.. . பேண்ட் போட்டா சட்டைக்குப் பதிலா ஜpப்பா போடுவாரு.. .

==========

4. ராத்திரி எட்டு மணி ஆனா என் கணவர் வீட்டுக் கதவைச் சாத்திடறhரு.. .

புதுசா கல்யாணம் ஆச்சே., கொஞ்ச நாள் அப்படித்தான் இருக்கும்.

அட நீ வேற அவரு பாத்திரம் தேய்க்கற விஷயம் வெளியே யாருக்கும் தெரியக் கூடாதாம்.

==========

5. சார் நான் பரீட்சை எழுதறப்ப இவனைப் பார்த்துதான் எழுதினேன்.

சரி.. . இண்டர்வ்யூக்கு இவரை ஏன் கூட்டிட்டு வந்தீங்க ?

எனக்கு பதில் தெரியாத கேள்வியைக் கேட்டீங்கன்னா இவரைக் கேட்டு பதில் சொல்வேன்.

==========

6. ஏன் சார் உங்களுடையது காதல் திருமணமா ?

எப்படி கரெக்டா சொன்னீங்க ?

இவ்வளவு மோசமான சமையலை இவ்வளவு ருசிச்சு சாப்பிடறீங்களே அதை வச்சுதான் கண்டுபிடிச்சேன்

==========

7. தலைதீபாவளிக்கு உன்னோட மாமனார் முறைப்படி எல்லாம் செஞ்சாரா.. ?

ம்.. . முறைப்படி செஞ்சார்.. . ஆனா, முறைச்சபடி செஞ்சார்

==========


இன்றைய மினி பிட்டு ஜோக்கு:


8, (முதலிரவு அறையில்) என்னது.. . அங்கேயே வெட்கப்பட்டுக்கிட்டு நிக்கிறே.. .? உனக்கு யாரும் எதுவும் சொல்லித் தரலையா.. .?

சொல்லித் தந்தாங்க. மொதல்ல அஞ்சு நிமிஷம் வெட்கப்படணும்-னு சொன்னாங்க.. அதான் பட்டுக்கிட்டிருக்கேன்.

Friday, October 2, 2009

பிட்டு - 48

ஒரு தபால் அலுவலகத்தில் ஒருத்தன் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். விலாசம் சரியா எழுதப்படாத மடல்களை ஆராய்ஞ்சு சரியான இடத்துக்கு அனுப்புறது தான் அவனோட வேலை.

ஒரு நாள் கடவுளுக்கு என்று விலாசமிடப்பட்டு சீரில்லாத கையெழுத்தில் ஒரு மடல் வந்தது. அந்த மடலைத் திறந்து பாத்து உள்ளே என்ன தான் எழுதியிருக்குன்னு பார்க்கலாமேன்னு நினைச்சான்.

அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்ததுன்னா:

நான் 83 வயதுள்ள வயசான விதவை. எனக்குக் கிடைக்கிற சொற்ப பென்ஷனில் தான் நால் காலத்தை ஓட்டுறேன். நேத்து என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க. அதில் 100 டாலர் இருந்தது. அந்தப் பணத்தை வச்சுத்தான் இனி அடுத்த பென்ஷன் வருகிற வரைக்கும் பொழுதை ஓட்டணும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை கிரிஸ்த்மஸ். அதுக்கு என்னுடைய இரண்டு தோழிகளை டின்னருக்கு வரச் சொல்லியிருக்கேன். பணமே இல்லாம இப்போ நான் என்ன பண்ணுவேன். எப்படி போய் சாப்பாட்டுக்கு பொருள் வாங்குவேன். எனக்குன்னு யாருமே இல்லை. கடவுளே, நீ மட்டும் தான் எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை.

எனக்கு எப்படியாவது உதவி செய்.

இப்படிக்கு,
உனது தீவிர பக்தை
எட்னா

இதைப் படிச்ச அந்த தபால் ஊழியருக்கு ரொம்ப இரக்கம் வந்திருச்சு. அந்த கடிதத்தை எல்லாருக்கும் வாசிச்சுக் காம்பிச்சாரு. அங்கே இருந்த எல்லாரும் தங்களது பர்ஸில் இருந்து கொஞ்சம் டாலர் எடுத்துக் குடுத்தாங்க. முழுசா ஒரு ரவுண்டு அடிச்சு வரும்போது, 96 டாலர் சேர்ந்துடுச்சு. அதை ஒரு கவர்ல வச்சு அந்த மூதாட்டிக்கே அனுப்பீட்டாங்க. ”இந்தப் பணம் எட்னா கையில் கிடைச்சா எப்படியும் கிரிஸ்த்மஸை நல்லாக் கொண்டாடிவாங்க” நினைச்சு, அன்னிக்கு முழு நாளும் அந்த ஊழியர்களுக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு.

கிரிஸ்துமஸும் வந்தது. போனது.

சில நாட்கள் கழிச்சு, அதே வயசான மூதாட்டி கிட்டே இருந்து இன்னொரு கடிதம் கடவுளுக்கு விலாசமிட்டு வந்துச்சு. அந்த கடிதத்தை நம்மாளு உடைக்கும் போது எல்லா ஊழியர்களும் அங்கே கூடிட்டாங்க.

இப்போ அந்தக் கடித்ததில் என்ன எழுதியிருந்தாங்கன்னா:

அன்புள்ள கடவுளுக்கு,

நீ எனக்குச் செய்த இந்த உதவிக்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன்?

உன்னுடைய அன்பான பரிசால் நான் என் தோழிகளுக்கு ஒரு பிரமாதமான டின்னர் கொடுத்தேன்.
அன்றைய நாள் மிகவும் அருமையான நாளா இருந்துச்சு. நீ கொடுத்த பரிசைப் பற்றி நான் என் நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன்.

இருந்தாலும் ஒரு சின்னப் பிரச்சினை.

நான் 100 டாலர் கேட்டிருந்தேன். 96 தான் குடுத்தீங்க. இதில 4 டாலர் மிஸ்ஸிங்.

இது அந்த போஸ்ட் ஆஃபீஸில் இருக்கிற அந்த வீணாப் போனவங்க தான் உருவியிருப்பாங்கன்னு நினைக்கேன்.

=========================

எனக்கு வந்த ஆங்கில மடலை கஷ்டப்பட்டு தமிழாக்கம் பண்ணி, தட்டச்சு செஞ்சு அனுப்பியிருக்கேன்.

மரியாதையா சிரிச்சிருங்க.

இல்லே. நடக்கிறதே வேற.

ஆமா. சொல்லிப்புட்டேன்.

==========================

மூலம்:


There was a man who worked for the Post Office

Whose job was to process all the mail that had illegible addresses.

One day, a letter came addressed in a shaky handwriting to God with no actual address.

He thought he should open it to see what it was about.

The letter read:

Dear God,

I am an 83 year old widow, living on a very small pension.

Yesterday someone stole my purse.

It had $100 in it, which was all the money I had until my next pension payment.

Next Sunday is Christmas, and I had invited two of my friends over for dinner.

Without that money, I have nothing to buy food with,

Have no family to turn to,

And you are my only hope.

Can you please help me?

Sincerely,

Edna

The postal worker was touched.

He showed the letter to all the other workers.

Each one dug into his or her wallet and came up with a few dollars.

By the time he made the rounds, he had collected $96,

Which they put into an envelope and sent to the woman.

The rest of the day, all the workers felt a warm glow

Thinking of Edna and the dinner she would be able to share with her friends.

Christmas came and went.

A few days later, another letter came from the same old lady to God.

All the workers gathered around while the letter was opened.

It read:

Dear God,

How can I ever thank you enough for what you did for me?

Because of your gift of love, I was able to fix a glorious dinner for my friends.

We had a very nice day and I told my friends of your wonderful gift.

By the way, there was $4 missing.

I think it might have been those bastards at the post office.

பிட்டு - 47

1. கடவுள் எங்க இருக்கார் ?-னு டீச்சர் ஒரு பையனைக் கேக்கறாங்க. அதுக்குப் பையன், எங்க வீட்டு பாத்ரூம்ல என்கிறான். அதிர்ச்சி யோடு எப்படி என்கிறார் டீச்சர்.

அதுக்குப் பையன், எங்க அப்பா, அம்மாவை வீடு பூரா தேடிட்டுக் கடைசியில் பாத்ரூமில் கண்டுபிடித்து, அடக்கடவுளே... நீ இங்கதான் இருக்கியா ? என்றார்

==========

2. அந்தப் பெண்ணுக்கு எழுதிய லவ் லெட்டரை சுக்குநூறாக் கிழிச்சு அவகிட்ட கொடுக்கறியே... ஏன் ?

அவ மட்டும் என்ன செய்யப்போறா ? கிழிச்சுதானே போடப்போறா!

==========

3. ச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே.

நான் உங்க மாமியாரையா திட்டறேன்... என் மாமியாரைத்தானே திட்டறேன்.

==========

4. நம்ம தலைவர் ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் மேல இவ்வளவு கோபமா இருக்கக்கூடாது.

ஏன்...?

அவரை அடுத்த ஜென்மத்துலேயும் ஜெயில்ல போடுவேன்னு சொல்றாரே.

==========

5. சுரேஷ்... கண்பார்வை யாருக்கு அதிகம் ? விலங்குகளுக்கா... மனிதர்களுக்கா.. ?

விலங்குகளுக்குத்தான் டீச்சர்.விலங்குகள் எதுவும் கண்ணாடி போடறதில்லையே டீச்சர்.

==========

6. நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. எதுக்கு கல்யாணம் வேற பண்ணிக்கிறீங்க...?

கஷ்டத்தோட கஷ்டமா இருக்கட்டுமேன்னுதான்.

==========

7. ரெண்டு அம்பயருக்கும் இடையில என்ன சண்டை ?

ஆளுக்கு அஞ்சு அவுட் கொடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டாங்களாம், ஆனா, இவரு ஆறு அவுட் கொடுத்துட்டாராம்.

==========

இன்றைய மெகா ஜோக்:


நான் சிகரெட் குடிச்சிட்டு இருந்ததை எங்கப்பா பார்த்துட்டாரு ?

ஐயையோ, அப்புறம் ?

தண்ணி போட்டுட்டு வந்து அடி பின்னிட்டாரு.

பிட்டு - 46

1. டாக்டர்.. . என் கணவருக்கு தினமும் ஸ்கூட்டர் ஓட்டற மாதிரி கனவு வருது.. .

இதுக்குப் போய் வருத்தப்படுவாங்களா ?

ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்றேன்னு தினமும் ராத்திரி என்னை இல்லே உதைக்கிறாரு.

==========

2. டாக்டர் .. . என் கணவர் தனக்குத்தானே பேசிக்கிறாரு.. .

அதுக்குக்கூட அவருக்கு உரிமை கிடையாதா மேடம்.. .?

==========

3. இவ்வளவு அழகா எனக்கு லெட்டர் எழுதியிருக்கானே ஒருத்தன், இவனைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க ?

படிச்சவன்னு தோணுது.

தப்பு. படிச்சவன் நான்தான். இவன் எழுதினவன்.

==========

4. ஹலோ டாக்டர், என் மாமியார் மூச்சு விட முடியாம ரொம்பக் கஷ்டப்படறாங்க

உடனே இங்கே கூட்டிண்டு வாங்க.

இதோ, மேக்கப் போட்டுண்டு ஒரு மணி நேரத்துக்குள்ளே வரேன்!

==========

5. வர வர எனக்கு வர்ற கனவு கூட டி.வி. நிகழ்ச்சி மாதிரி ஆயிடுத்து.

ஏன்...?

கனவு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி ஏகப்பட்ட விளம்பரம் வருது.

==========

6. இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?

போய்யா, போற வழியில் ஒரு சொறிநாய் துரத்திட்டு வருது.

==========

7. தலைவர் ஏன் இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்காரு ?

அவரோட சின்ன வீடு யார் கூடவோ ஒடிட்டாங்களாம்.

==========


இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:


8. வேகப் பந்து வீச்சாளரைக் கட்டிக்கிட்டது தப்பாப் போச்சா... எப்படி ?

பாஸ்ட் நைட் கொண்டாடிட்டார்.

பிட்டு - 45

1. பொண்ணு வீடு பெரிய வீரப் பரம்பரைன்னு கல்யாண புரோக்கர் சொன்னதை நம்பிப் போய் ஏமாந்துட்டேன்.

என்னாச்சு ?

பொண்ணுக்குப் பெரிய மீசை இருக்கு.

==========

2. அமைச்சர் முடிவெட்டப் போறப்போ எதுக்கு ஆறுபேரைக் கூட்டிகிட்டுப் போறார் ?

சலூன்ல போர்வை போத்தறப்போ கைதட்டத்தான்.

==========

3. கொஞ்ச நாளைக்கு நீங்க ஓட்டல்ல சாப்பிடக் கூடாது.

சரி டாக்டர், அப்ப உங்க நர்ஸைச் சமைச்சுப் போட அனுப்பறீங்களா.. .?

==========

4. நீதிபதியை கறுப்பு டிரஸ் போடாம வர வைக்க முடியுமா ?

எதுக்கு தலைவரே ?

இன்னைக்குக் கறுப்பு எனக்கு ராசியில்லாத நிறம்னு ராசிபலன்ல போட்டிருக்கு.

==========

5. உங்களை செக் பண்ணிட்டேன்.. . ஸ்லோ பாய்சனா இருக்குமோனு சந்தேகமா இருக்கு.

சந்தேகம் வேண்டாம். .. இருபத்தஞ்சு வருஷமா என் மனைவியோட சமையல்தான்.

==========

6. உங்க கணவருக்குக் குளிர் ஜுரம் .. அதனால நீங்க பக்கத்துல இருக்காதீங்க.

ஏன் டாக்டர் ?

நீங்க பக்கத்துல இல்லன்னா அவருக்குக் குளிர்விட்டுப் போயிடும்.

==========


7. தன்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெண்மணியிடம் டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தார். ஸாரி, மேடம் உங்களை என்னால் காப்பாத்த முடியாது. நோய் ரொம்பவே முத்திவிட்டதால ஆறு மாசம்தான் நீங்கள் உயிரோடவே இருக்க முடியும்.

கேட்க அதிர்ச்சியாகத் தான் இருந்தது என்றhலும் சற்று நேரத்திலேயே அந்தப் பெண்மணி சுதாரித்துக் கொண்டாள்.

குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய அடிப்படையான உதவிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு மீதி காலத்தை மகிழ்ச்சியோடு கழிக்கத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்ன டாக்டர், இந்த ஆறு மாத காலத்தை எப்படிக் கழிப்பதாக உத்தேசம் ? என்று கேட்டார்.

என் மாமியாரோட இருக்கப் போறேன் டாக்டர் என்றாள் அந்தப் பெண்மணி.

என்னது.. . உங்க மாமியாரோடவா ? அவங்களுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம்னு ஏற்கெனவே சொல்லியிருந்தீங்களே ?

அதான் டாக்டர் விஷயமே, அவங்களோட இருந்தா இந்த ஆறு மாத காலமே எனக்கு அறுபது வருஷமா தோணும்.

==========

இன்றைய மெகா ஜோக் இது தாங்க:


8. பால்காரர் வீட்டுல பெண் எடுத்தது தப்பாப் போச்சு.

ஏன்.. . என்னாச்சு.. .?

அங்கே பாரேன்.. . முதலிரவுக்குப் பால் சொம்புக்குப் பதிலா, பால்கேன் எடுத்துக்கிட்டுப் போறதை.

==========

பிட்டு - 44

1. தளபதியாரே, என்ன இது ? போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?

ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.

==========

2. தலைவரே, உங்க பங்களா, ஃபேக்டரிக்கு, சினிமா தியேட்டர் இது எல்லாத்துக்கும் மக்கள் அன்புனு பேர் வச்சிருக்கீங்களே ஏன் ?

என்னோட அரசியல் வாழ்வுல மக்கள் அன்பைத் தவிர எதுவும் சம்பாதிக்கலைனு சொல்லிக்கலாமே ?

==========

3. அந்த டாக்டர் பி.எம். பார்க்கிற-வர்னு சொல்றாங்களே. அவரு பிரைம் மினிஸ்டருக்கு வைத்தியம் பார்க்கறவரா ?

அட, நீங்க ஒண்ணு.. . அவருக்கு போஸ்ட் மார்ட்டம் மட்டும்தான் பண்ணத் தெரியும். அதத்தான் சுருக்கமா பி.எம். ஸ்பெஷலிஸ்ட்ன்னு சொல்றாங்க

==========

4. அந்தத் தலைவருக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வராது போலிருக்கு.

அதுக்காக முத்தமிழையும் வித்தவன்-னு பட்டப் பெயர் சூட்டிக் கூப்பிடறது கொஞ்சமும் நல்லா இல்லே.

==========

5. நீங்க ஒரு ரௌடியை அடிச்சுத் துவைச்சதுல மயங்கி, உங்க மனைவி உங்களைக் கல்யாணம் பண்ணிட்டாங்களே.. . வாழ்க்கை எப்படி இருக்கு ?

இப்ப மனைவியோட துணிமணிகளை அடிச்சுத் துவைச்சுட்டு இருக்கேன்!

==========

6. என் பையன் பென்சில் பட்டாசு கேட்டான்னு அதை வாங்கிக் கொடுத்தேன்.

அதுக்கு ஏன் சார் இப்படி அலுத்துக்கறீங்க ?

பட்டாசு பாதியிலேயே அணைஞ்சுடுச்சாம்.. . இப்போ ஷார்ப்பனர் பட்டாசு வேணும்னு கேட்கறான்.

==========

7. அமைச்சர் வீட்டில் என்ன விழா ?

புது வேலைக்காரிக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பும் செய்து வைக்கிறார்.

==========


கடைசியா பிட்டு ஜோக்குக்கு இங்கே வாங்க:


8. அரசியல் வாதியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா போச்சு.

ஏன் ?

முதலிரவை சீரணி அரங்கத்துல வச்சுக்கலாம்னு சொல்றாரு.

பிட்டு - 43

1. ரசத்துல நான் புளியே போட மறந்துட்டேன்... எப்படி அப்படியே சாப்பிடறீங்க ?

நீ சமையல் பண்ண ஆரம்பிச்சபோதே எனக்கு வயித்துல புளியைக் கரைக்க ஆரம்பிச்சிடிச்சு

==========

2. என்னங்க... திருடன்பாட்டுக்கு நம்ம வீட்ல புகுந்து திருடிட்டிருக்கான். நீங்க ஏதோ எழுதிட்டிருக்கீங்க.. .?

சும்மா இருடி... நாளைக்கு போலீஸ் வந்து என்னென்ன பொருள் காணாமப் போச்சுன்னு கேட்டா, கரெக்டா சொல்ல வேணாமா ?

==========

3. எல்லா அலுவலகக் கதவுலேயும் தள்ளு-னு போட்டிருக்கும். இந்த அலுவலகக் கதவுலே தள்ளாதீர்கள்-னு போட்டிருக்கே... ஏன் ?

இது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம்

==========

4. பெண் பார்க்க ஆரம்பிச்சு என் கணவர் பார்த்த 52-வது பொண்ணு நான்!

பாவம்.. . 51 தடவை லக்கியா இருந்திருக்கார்.

==========

5. என் கிட்டே வந்து முணுக் முணுக்-னு அடிக்கடி சொல்றியே... ஏன் ?

முணுக்குன்னா உங்களுக்குக் கோபம் வரும்னீங்களே, அதான்... செக் பண்றேன்.

==========

6. சமையலுக்குப் புதுசா ஒரு கண்டக்டரைப் போய் வெச்சிருக்கீங்களே... எதுக்கு ?

குக்கர் சரியா விசில் அடிக்கமாட்டேங்குது சார்... அதான்!

==========

7. நீ செஞ்ச தீபாவளி பலகாரத்தை யாருக்கும் கொடுக்காதேன்னு, என் சம்சாரத்துக்கிட்ட முதல்லயே சொன்னேன். .. கேட்கல!

ஏன். .. இப்ப என்னாச்சு ?

பயங்கர ஆயுதங்கள் தயாரிச்சதா தெருக்காரங்க புகார் பண்ணி போலீஸ் என் சம்சாரத்தை கைது பண்ணிட்டாங்க.

==========

கடைசியா இன்னிக்கு பிட்டு ஜோக்கு:

8. இது கவர்ச்சி நடிகை ஆரம்பிச்சிருக்கிற ஓட்டலா ?

எப்படி கண்டுபிடிச்சே ?

ஜட்டிநாடு ஓட்டல்னு போட்டிருக்காங்களே!

பிட்டு - 42

1. அந்த டாக்டர் என்ன, தேங்காய் வியாபாரியோட மகனா ..?

ஏன் கேட்கறீங்க.. .?

வியாதி முத்திப்போச்சான்னு பார்க்கறதுக்கு பேஷண்ட்டைத் தூக்கிக் குலுக்கி தட்டிப் பார்க்கறாரே!

==========

2. இந்த ஆபரேஷன் சக்ஸா ஆகலைனா வருத்தப்படும் முதல் ஆள் நான்தான்.

ஏன் டாக்டர்.. .?

பின்னே... நீங்க இருக்கமாட்டீங்களே... நான் மட்டும்தானே வருத்தப்பட்டு ஆகணும்!

==========

3. எதுக்கு டாக்டர், என் உடம்பிலிருந்து தேவையில்லாம ஒரு லிட்டர் ரத்தம் எடுத்திருக்கீங்க.. .?

சிகிச்சை முடிஞ்சு ஒழுங்கா ஃபீஸ் கட்டிட்டா, எடுத்த ரத்தத்தை திரும்ப உங்களுக்கே செலுத்திடுவோம்.

==========

4. இன்னும் ஒரு மணி நேரத்துல டாக்டர் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணப்போறார்.

ஏதாவது சாப்பிடலாங்களா ?

கடைசியா ஒரு முறை என்ன வேணாலும் சாப்பிட்டுக்குங்க.

==========

5. முகம் இருண்டு படுசோகமாக வந்த தனது கல்லூரி நண்பனை விசாரித்தான் அவன்.

மச்சி, என்னாச்சு உனக்கு ?

கம்ப்யூட்டர் வாங்கணும். .. கொஞ்சம் பணம் அனுப்புங்க-னு வீட்டுக்கு லெட்டர் போட்டிருந்தேன்.

புரிஞ்சிடுச்சு, இப்ப பணம் அனுப்ப முடியாது-னு பதில் வந்திருக்கு அதானே மேட்டர் ?

அதில்லை கம்ப்யூட்டரை வாங்கி அனுப்பியிருக்காங்க!

==========

6. அவர் பயங்கர குடிகாரர்...

இருக்கட்டும்... அதுக்காக கை பம்புல தண்ணி அடிக்கிறப்பகூட ஊறுகாயைத் தொட்டுக்கணுமா ?

==========

7. எங்க வீட்ல மாமியார் - மருமகள் சண்டைகூட டி.வி. சீரியல் மாதிரி ஆயிடுச்சு.

எப்படி ?

ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி முதல்நாள் சண்டைலேர்ந்து கொஞ்சம் போட்டுக் காட்டுவாங்க!

==========

கடைசியா இன்றைய மெகா ஜோக்கைப் படிச்சிருங்க:

8. உன் கணவர் வீட்டு வேலைய எல்லாம் முடிச்சுட்டாராம் ?

உனக்கு எப்படித் தெரியும் ?

இதோ பாரு கேபிள் டி.வி-யில் விளம்பரம் கொடுத்திருக்காரே!

பிட்டு - 41

1. நேத்திக்கு எதுவரைக்கும் பாடம் நடத்தினேன்-னு டீச்சர் கேட்டதுக்குப் பையன் என்ன பதில் சொன்னான் தெரியுமா ?

என்ன சொன்னான் ?

பெல் அடிக்கிற வரைக்கும்.

==========

2. நான் ஒருத்தன் இல்லேன்னா இந்தக் கட்சி அடுத்த நிமிஷமே இல்லாமப் போயிடும்-ன்னு பேசிட்டுப் போறhரே... அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா ?

அட நீங்க வேற... அவர் தொடங்கின கட்சியில் அவர் மட்டுந்தான் இருக்கார். அதைத்தான் அப்படிச் சொல்லிட்டுப் போறார்.

==========

3. என்ன இது... என்னை வரவேற்க ஒரு தொண்டர்கூட வரலையா ?

தலைவரை வரவேற்க ஸ்டேஷனுக்கு வாங்கன்னு மொட்டையா சொன்னது தப்பா போச்சு எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ட்டாங்க போல இருக்கு!

==========

4. அவரு காது டாக்டர் சார்... அவர்கிட்டே போய் ஏன் உங்க கண் ப்ராப்ளத்தைச் சொல்றீங்க ?

கண்ணாடி போட்டா என்னோட காதுல சரியா நிற்கமாட்டேங்குது... அதான்!

==========

5. என்னோட சோப்பை எதுக்கு நாய்க்குப் போட்டு குளிப்பாட்றே ?

உங்களுக்கு என்ன தொற்று நோயா இருக்கு... நாய்க்குப் பரவிடும்ங்கிற மாதிரில்ல பயப்படறீங்க ?

==========

6. இங்கே ஸ்டெனோ வேலைக்கு அப்ளிகேஷன் போட்ட எத்தனையோ பேர்ல உன்னை மட்டும் நான் செலக்ட் பண்ணிய காரணம் என்ன தெரியுமா ?

சொல்லுங்க டார்லிங்!

===========

7. இந்தாளு அப்பா அம்மா மேல உயிரையே வச்சிருக்காரு.

இந்தக் காலத்துல இப்படி ஒருத்தர் இருக்காரா ?

ஆமா... பொண்டாட்டி இவர போட்டு அடிக்கும்போது அப்பா. அம்மான்னுதான் கத்துவாரு!

இன்றைய மினி பிட்டு ஜோக்கு:

8. செக்ஸ் தொழிலாளிகள் கோரிக்கை தொடர்பா அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையால் ஏதோ பெரிய பிரச்சினையாயிடுச்சாமே ?

ஆமா பலகட்டப் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு சொன்னது, பத்திரிகையில், பலகட்டில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படும்னு அச்சாயிடுச்சாம்!

பிட்டு - 40

1. அந்த டைரக்டர் இதுக்கு முன்னால பஸ் கண்டக்டரா இருந்திருப்பார் போலருக்கு ?

எப்படி சொல்றே ?

கட், கட்னு சொல்லாம ஸ்டாப், ஸ்டாப்-ங்கறாரே

==========

2. ஐயா... ஒரு மாசமா இந்த நர்ஸ் உங்களுக்கு சேவை பண்ணியிருக்கலாம். அதுக்காக டிஸ்சார்ஜ் ஆகிறப்ப நர்ஸைக் கட்டிப்பிடிச்சு அழறதுக்கெல்லாம் அனுமதிக்க முடியாது!

==========

3. நேத்து மூக்குப்பிடிக்க சாப்பிட்டிங்களே... அதே சாம்பார்தான் இன்னிக்கும்.

சரி, இன்னிக்கு மூக்கைப் பிடிச்சுட்டு சாப்பிடறேன்.

==========

4. நான் என் மாமியார் எதிரே வாயையே திறக்கமாட்டேன்...

அவ்வளவு மரியாதையா ?

நீ வேற... அவங்களுக்கு சுத்தமா காது கேட்காது. எதுக்குப் பேசி வீணா நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும்னுதான்

==========

5. ஆனாலும் அந்த டாக்டருக்கு ரொம்பத்தாண்டி நக்கல்

ஏண்டி...?

பல்லைப் பிடுங்கறப்போ வலிச்சா, பல்லை நல்லா கடிச்சிக்குங்கன்னு சொல்றாரே!

==========

6. பக்கத்து வீட்டு வேலைக்காரியிடம் பேசியது தப்பா போச்சு ?

ஏன் - என்னாச்சு ?

எங்க வீட்டு வேலைக்காரி என்னைத் தப்பா நினைச்சுட்டா

==========

7. என் மனைவியிடம், உனக்குப் புன்னகையே அழகா இருக்குன்னு சொன்னேன்

அதுக்கென்ன ?

உடனே அதை வாங்கித் தாங்கன்னு அரிக்க ஆரம்பிச்சிட்டா.

==========


அப்புறம் இன்றைய மெகா ஜோக்:



8. அவரு சரியான குடிகாரரா இருக்காரு...

எப்படிச் சொல்றே ?

டாக்டர் கொடுத்த டானிக்கைகூட சோடா கலந்துதான் சாப்பிடறாரு

பிட்டு - 39

1. குருவே, சித்தி அடைய ஒரு வழி சொல்லுங்கள் குருவே?

சித்தாப்பாவுக்கே துரோகம் செய்ய நினைக்கிறாயே, நீ உருப்படுவியா...?

==========

2. 5-ம் வார்டு பேஷண்ட் பீஸ் செட்டில் பண்ணாம ஓடிட்டாரு...

அப்படியா ? அங்கே டூட்டி பார்த்த நர்ஸை கூப்பிடுங்க.

அந்த நர்ஸோடதான் ஒடிப்போய்ட்டாரு.

==========

3. நர்ஸ், இந்த மருந்தை சாப்பிட்டேன். ஒரு கிஸ் குடுங்க.

எதுக்கு ?

கசப்பான மருந்தை சாப்பிட்டதும் டாக்டர்தான் இனிப்பா ஏதாவது சேர்த்துக்குங்கன்னார்.

==========

4. மாப்ளே, எம் பொண்ணை கிளி மாதிரி வளர்த்துட்டேன். அவளை பத்திரமா பார்த்துக்கோங்க.

கவலைப்படாதீங்க மாமா. வீட்ல அடைச்சி வச்சேன்னா கதவைத் திறந்தே விடமாட்டேன்.

==========

5. சார், அந்த எக்ஸ் மினிஸ்டர் கைதியை ஒரே ஜெயில்ல ஒரு வருஷம் வெச்சது தப்பாப் போச்சு...

என்னாச்சுய்யா...?

அந்த ஜெயிலை பிளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்காராம்

==========

6. டாக்டர்... எங்க மாமியார் கால்ல முள்குத்திடுச்சு...

முள்ளை எடுக்கணுமா ?

முள்ளு ரொம்ப சின்னது... எடுக்கறது கஷ்டம்... காலை எடுத்துடுங்க!

==========

7. வர வர எனக்குக் கண்ணே தெரியமாட்டேங்குது.

பின்ன... அன்னிக்கு நான் தூரத்துல போயிட்டிருக்கும்போது கரெக்டா என்னைக் கூப்பிட்டீங்களே, எப்படி ?

போகும்போதுதானே ? எனக்கு வரவரதானே கண்ணு தெரியலேனு சொன்னேன்

இன்றைய மெகா ஜோக்:

8. அந்தப் பெண் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாள். அன்று காலையில்தான் அவள் கணவன் செத்துப் போயிருந்தான். தனது செல்லப் பிராணியான கழுதையால் உதைப்பட்டு அவன் சாவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும், எல்லாவற்றையும் குறை சொல்லும், கண்டதற்கெல்லாம் கை ஓங்கும் கணவன்தான் என்றாலும் அவனது இழப்பு அவளை ரொம்பவே பாதித்தது.

ஆச்சு... அடுத்த சில விநாடிகளில் மண்ணுக்குள் அவன் அடக்கமாகப் போகிறhன். அந்தச் சோக நிமிடங்களில் ஆறுதல் சொல்ல வந்த ஒவ்வொருவரிடமும் அவள் தலையாட்டிக் கொண்டிருந்ததையே கவனித்துக் கொண்டிருந்தார் ஒருவர். ஆறுதல் சொல்ல வந்த ஆண்களிடம் அவள் சரி என்பது போலவும் பெண்களிடத்தில் இல்லை என்பது போலவும் அவள் தலையாட்டியது அவரை ரொம்பவே குழப்பியது. துக்கம் விசாரிப்பதில்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்குமா என்ன ? அவளிடமே நேரில் போய்க் கேட்டார்.

அவள் சொன்னாள்... மனசு கலங்காதே என்றார்கள் ஆண்கள். அந்தக் கழுதை விலைக்குக் கிடைக்குமா.. ? என்று கேட்டார்கள் பெண்கள்