Saturday, October 3, 2009

பிட்டு - 62

1. அடியே நான் சாமியார் ஆகிவிட்டேன்

சரி, இப்பவாவது நாலுகாசு சம்பாதிக்கப் பாருங்க.. .

==========

2. இன்னைக்கு ஸ்டேஷனில் ஒரு கேஸைத் துருவித் துருவி விசாரிச்சேன்

அதெல்லாம் கிடக்கட்டும்.. . முதலில் தேங்காயைத் துருவுங்க.. . அப்புறம்தான் சாப்பாடு.. .

==========

3. நாட்டு வைத்தியரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுத் தவிக்கிறேன் ?

ஏன் ?

தலைக்கு வேப்பம்-பூ வாங்கிட்டு வந்து வச்சுக்கச் சொல்றாரு.

==========

4. என்னது, அவர்கள் ஹைடெக் காதலர்களா ?

ஆமாம், முன்பு பனகல் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவங்க. இப்போது டைடல் பார்க்குக்கு வந்துட்டாங்களே. .

==========

5. டாக்டர், எனக்கு அடிக்கடி கழுத்துவலி வருது.. .

பொண்டாட்டியைத் தலைல தூக்கி வெச்சுக்கிட்டு ஆடினா.. . இப்படித்தான்.

==========

6. அந்த ஆள் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றீங்க.. .?

பின்ன .. என்னோட ப்ளட்ல யூரியா நிறைய இருக்கு.. . அதனால தலைமுடி நல்லா வளரும்னு சொல்றாரே..

==========

7. டாக்டர், ஒரு வாரமா பின்னாடி தலைமுடி ஒரே கொட்றது.. .

முன்னாடி எப்பவாவது இது மாதிரி கொட்டியிருக்கா. ?

இல்லே டாக்டர்.. . பின்னாடி தான் கொட்டியிருக்கு..

==========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:

8. நேத்து நடந்த கல்யாணத்துல தலைவர் மானத்தை வாங்கிட்டார்

என்னாச்சி?

திருமணத்தை நடத்தி வைத்த நான், சாந்தி முகூர்த்தத்தையும் நடத்திவைத்து மணமக்களை சந்தோஷப் படுத்துவேன்னு மைக்கில பேசிட்டாரு.

No comments:

Post a Comment