Saturday, October 3, 2009

பிட்டு - 60

1. மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்

கணவன் : ரொமப தேங்ஸ்.

மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடுவன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்

==========

2. கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

==========

3. மனைவி : எங்கிட்ட சொல்லாம வேலைக்காரனுக்கு ஏன் உங்க சட்டைய கொடுத்தீங்க?

கணவன் : ஏன் உனக்கு சொல்லணும்?

மனைவி : நீங்கன்னு நெனச்சு, அவன் முதுகுல ஓங்கி அடிச்சுட்டேன்.

==========

4. கடை வீதியில் ஒரு பெண்ணிடம் பிச்சைக்காரி ஒருத்தி " அம்மா தாயே காசு கொடுங்கம்மா சாப்பிட்டு நாலு நாளாயிடுச்சு".

பெண்: நான் காசு குடுத்தா அதில பவுடர் சீப்பு கண்ணாடி வாங்க மாட்டேயே"

பிச்சைக்காரி: நான் குளிச்சே ரொம்ப நாளாயிடுச்சு. எனக்கு எதுக்குமா இதெல்லாம்

பெண்: காசு குடுத்தா அதில நல்ல சேலை வாங்க மாட்டேயே

பிச்சைக்காரி: பிச்சை எடுக்கற எனக்கு எதுக்குமா நல்ல சேலையெல்லாம். காசு குடுங்க நான் சாப்பிடணும்.

பெண்: காசு தறேன். அதுக்கு முன்னால உன்னை என்னொட கணவர்கிட்ட காட்டணும். எனக்கு பவுடர் சீப்பு கண்ணாடி சேலை எல்லாம் வாங்கி தராட்டா நான் எப்படி இருப்பேன்னு காட்டணும்.

==========

5. பேய் இருக்குன்னா நம்புற நீங்க, கடவுள் இருக்காருன்னா ஏன் நம்ப மாட்டேங்குறீங்க???

என் மனைவிகிட்டேயிருந்து என்னை காப்பாத்த யாரும் இல்லையே...

==========

6. ஏங்க.. . நம்ம பையனுக்கு உடனே ஒரு நல்ல பொண்ணா பாருங்க. அவனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு

எப்படிச் சொல்றே

அவனோட ரூம்ல போய் பாருங்க. . . சமையல் செய்வது எப்படி ?-னு புத்தகமா வாங்கி அடுக்கியிருக்கான்.

==========

7. அந்த ஆளுக்கு வைர- வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு.

எப்படி ?

இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு.

==========


இன்றைய மெகா ஜோக்:

8. மனைவி: என்னங்க... எதிர் வீட்டுக்காரன் என்னை நாய்னு திட்டீட்டான்.

கணவன்: வரட்டும் ராஸ்கல். நாய்னா அவனுக்கு அவ்வளவு கேவலமாப் போச்சா?

No comments:

Post a Comment