Saturday, October 3, 2009

பிட்டு - 51

1. வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறாங்க ?

இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம்

==========

2. ஹோட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சா. .. ஏன் ?

யாராவது பூச்சி மருந்து கேட்டால் சாப்பிடவா, பார்சலா-ன்னு கேட்கிறார்

==========

3. பக்கத்து வீட்டில ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ? எங்க ஆளையே காணும்

பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான்

==========

4. தலைவர் பணத்துக்கெல்லாம் ஃபேர் அன்ட்லவ்லி தடவிக்கிட்டு இருக்காரே, ஏன் ?

அதை தடவினா கருப்பெல்லாம் வெள்ளையாகும்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாரு.

==========

5. கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கிறதுதான் நல்லது.

அது சரி, அதுக்கு பெண்டாட்டி ஒத்துக்குவாளா ..?

==========

6. ஜூனியர் வக்கீலா லேடியை நியமிச்சது தப்பாபோச்சு

ஏன் ?

கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா, குக்கர்ல இருக்கிற இருக்கிற கேஸ் கட்டை கொண்டு வர்றாங்க

==========

7. அவர், ஒரு காலத்துல கோயில்ல சிதறு தேங்காய் பொறுக்கி சாப்பிட்டவராம்

இப்ப என்ன பண்றாரு ?

படிப்படியா வளர்ந்து கோயில் சொத்தையே சாப்பிடுறாரு.


==========


இன்றைய சின்ன பிட்டு ஜோக்கு:


8. கராத்தே மாஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு ?

என்னாச்சு ?

முதலிரவிலே ஆ- ஊ-ன்னு கத்தி என் மானத்தை வாங்கிட்டாரு

No comments:

Post a Comment