Saturday, October 3, 2009

பிட்டு - 54

1. எங்க மானேஜருக்கு ஆபீஸ்ல திடீர்னு பெண்டாட்டி ஞாபகம் வந்தா போதும்.. .

உடனே வீட்டுக்கு கிளம்பிடு வாரா.. .?

இல்ல ஆபீஸ்ல எல்லார் மேலயும் எரிஞ்சு விழுவாரு.

=========

2. போலீஸை ஏன் அரிவாளால் வெட்டுனே ?

சும்மா மாமூலை வெட்டு வெட்டுனு தொந்தரவு குடுத்துட்டு இருந்தாரு மொத்தமா வெட்டிட்டேன்.

==========

3. டீச்சர்: ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.

மாணவன்: உங்க கொடுமைகளை தாங்கிக்கிட்டு உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார் டீச்சர்.

==========

4. உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே

==========

5. டேய். .. மரியாதையா பீரோ சாவியை எடு.

எடுக்கறேன். .. முதல்ல பணம் கொடு.

எதுக்கு ?

பீரோ வாங்கத்தான்

==========

6. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு

ஏன் ?

நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு.

=========

7. கணவன்: என்ன இது, சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?

மனைவி: நீங்க தானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க.

=========


இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. டாக்டர், ரெண்டு நாளா நானும் கவனிச்சிட்டு இருக்கேன். எப்பப்பாரு என் சம்சாரம் கையை டச் பண்ணிக்கிட்டே இருக்கீங்களே ?

என் மனைவிக்கு ஆபத்து, கைவிட்டுடாதீங்க டாக்டர்னு நீங்கதானே சொன்னீங்க ?

No comments:

Post a Comment