Friday, October 2, 2009

பிட்டு - 47

1. கடவுள் எங்க இருக்கார் ?-னு டீச்சர் ஒரு பையனைக் கேக்கறாங்க. அதுக்குப் பையன், எங்க வீட்டு பாத்ரூம்ல என்கிறான். அதிர்ச்சி யோடு எப்படி என்கிறார் டீச்சர்.

அதுக்குப் பையன், எங்க அப்பா, அம்மாவை வீடு பூரா தேடிட்டுக் கடைசியில் பாத்ரூமில் கண்டுபிடித்து, அடக்கடவுளே... நீ இங்கதான் இருக்கியா ? என்றார்

==========

2. அந்தப் பெண்ணுக்கு எழுதிய லவ் லெட்டரை சுக்குநூறாக் கிழிச்சு அவகிட்ட கொடுக்கறியே... ஏன் ?

அவ மட்டும் என்ன செய்யப்போறா ? கிழிச்சுதானே போடப்போறா!

==========

3. ச்சே... எப்போ பார்த்தாலும் மாமியாரைத் திட்டிக்கிட்டே இருக்கியே.

நான் உங்க மாமியாரையா திட்டறேன்... என் மாமியாரைத்தானே திட்டறேன்.

==========

4. நம்ம தலைவர் ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவர் மேல இவ்வளவு கோபமா இருக்கக்கூடாது.

ஏன்...?

அவரை அடுத்த ஜென்மத்துலேயும் ஜெயில்ல போடுவேன்னு சொல்றாரே.

==========

5. சுரேஷ்... கண்பார்வை யாருக்கு அதிகம் ? விலங்குகளுக்கா... மனிதர்களுக்கா.. ?

விலங்குகளுக்குத்தான் டீச்சர்.விலங்குகள் எதுவும் கண்ணாடி போடறதில்லையே டீச்சர்.

==========

6. நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. எதுக்கு கல்யாணம் வேற பண்ணிக்கிறீங்க...?

கஷ்டத்தோட கஷ்டமா இருக்கட்டுமேன்னுதான்.

==========

7. ரெண்டு அம்பயருக்கும் இடையில என்ன சண்டை ?

ஆளுக்கு அஞ்சு அவுட் கொடுக்கணும்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டாங்களாம், ஆனா, இவரு ஆறு அவுட் கொடுத்துட்டாராம்.

==========

இன்றைய மெகா ஜோக்:


நான் சிகரெட் குடிச்சிட்டு இருந்ததை எங்கப்பா பார்த்துட்டாரு ?

ஐயையோ, அப்புறம் ?

தண்ணி போட்டுட்டு வந்து அடி பின்னிட்டாரு.

No comments:

Post a Comment