Friday, July 3, 2009

பிட்டு - 8

1. பஸ்லே பெரியவங்க நிக்கிறதைப் பார்த்தா என்னாலே தாங்க முடியாது.
உடனே எழுந்து இடம் கொடுத்துடுவியா ?
கண்ண இறுக மூடிக்கிட்டு தூங்குற மாதிரி பாவனை பண்ணிடுவேன்.
==========
2. பெண் பார்க்க வாசல் வரை வந்துட்டு திடீர்னு திரும்பிப் போறீங்களே... ஏன் ?
உள்ளே டிபன் வாசமே வரலியே
==========
3. மாப்பிள்ளை அரசியல்ல இருக்கலாம் அதுக்காக இப்படியா ?
என்னவாம் ?
பெண் பார்க்க வந்த இடத்துல பெண் வாயால வாழ்க கோஷம் போடச் சொல்றார்
==========
4. வீட்டுல உள் வேலையெல்லாம் என் மனைவி பார்த்துப்பா... வெளி வேலையெல்லாம் நான் பார்த்துப்பேன்.. .
அதுக்குன்னு தினமும் நீங்க வீட்டு வாசல்ல கோலம் போடறது நல்லாயில்லை.
==========
5. நீ ஏன் பட்டப்பகல்ல திருடினே ?
எனக்கு மாலைக்கண் வியாதி, நைட்டுல வெளியில போகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு..
==========
6. டேய், நான் திருடன்... மரியாதையா எடு பர்ஸை
டேய், நான் போலீஸ்காரன்... மரியாதையா எடு மாமூலை
==========
7. டாக்டர் மோசமா... எப்படி ?
பேஷண்ட்டைப் பார்த்து, நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கறாரே ?
இதிலென்ன தப்பு ?
அதை ரொம்ப ஆச்சரியமாகக் கேட்கறாரே
==========

இன்றைய மெகா பிட்டு ஜோக்கு

8. திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!

No comments:

Post a Comment