Thursday, July 9, 2009

பிட்டு - 25

1. எதுக்கு தூங்கிக்கிட்டிருக்கிற உன் கணவரை அலாரத்தை எடுத்து அடிச்சே ?

அலாரம் அடிச்சாத்தான் அவர் எழுந்திரிப்பாரு.
==========
2. முகம் தொங்கிப்போய் வந்த அவனைக் கனிவோடு விசாரித்தான் நண்பன், "ரொம்ப கவலையா இருக்கே போலிருக்கு என்னாச்சு ?"

"நான் அப்பாவாகப் போறேன்" என்ற அவனது பதிலில் சோகம் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

"வாவ்! சந்தோஷமான சமாசாரமாச்சே, இதுக்குப் போய் ஏண்டா கவலைப்படறே!".

"என்ன சந்தோசமான சமாசாரம் ? இந்த விஷயம் இன்னும் என் பெண்டாட்டிக்குத் தெரியாது".
==========
3. டாக்டர் நான் நூறு வயசு வரைக்கும் இருப்பேன்னு ஜோசியர் சொல்லி இருக்காரு.

அப்ப சரி நானா ஜோசியரான்னு ஒரு கை பார்த்துடுவோம்.
==========
4. அந்த ஆசிரமத்துல இருக்கிற நாய் ஏன் பயங்கரமா குரைக்குது ?

அதுவா யாரோ நிஜ சாமியார் உள்ளே நுழைஞ்சிருக்காராம் அதான்
==========
5. யுவர் ஆனர், என் சார்பா வாதாட வக்கீல் யாரும் இல்லை ..

அதுக்காக .. .. ?

நீங்களாவது என் சார்பா தீர்ப்பு சொல்லக்கூடாதா ?
==========
6. ஏண்டி அவர்தான் ஆம்பளை அப்படி நடந்துகிட்டாரு நீ என் தடுக்கலை ?

நீங்கதானே நாங்க சொல்றதை எல்லாம் தட்டாம கேட்டு நடந்தா சம்பளம் சேத்து தாரேன்னு சொன்னீங்க.
==========
7. நான் கொடுத்த ராஜினாமா கடிதத்தைக் கட்சி மேலிடத்துல வாங்க மறுத்துட்டாங்க.

ஏன் ?

பதவியில இருக்கறவங்கதான் அதெல்லாம் கொடுக்கணுமாமே.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. உன் மனைவிக்கும் உங்கம்மாவிற்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?

நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா.

No comments:

Post a Comment