Thursday, July 9, 2009

பிட்டு - 28

1. அன்பே, வாங்க ஒடிப் போயிடலாம் கூழோ கஞ்சியோ நீங்க ஊத்தறதை நான் சாப்பிட்டுக்கறேன் .. ..

சந்தடிச்சாக்குல சமையல் வேலையை என் தலைலகட்டறே பாத்தியா.
==========
2. ஏன் தோசை நடுவுல ஒட்டை இருக்கு ?

இதுதான் புதுசா வந்திருக்கிற சி.டி தோசைங்க
==========
3. நடிகை 1: யாராவது எனக்கு பழம் கொடுத்தால் நான் வாங்க மாட்டேன்.

நடிகை 2: ஏன் .. ?

நடிகை 1: அப்புறம், "பழம் பெறும் நடிகை"னு சொல்லிடுவாங்க
==========
4. ஒரு மாவட்ட கலெக்டருக்கு வேறு ஊருக்குப் போகச் சொல்லி டிரான்ஸ்ஃபேர் ஆர்டர் வந்தது. கலெக்டரின் ஊழியர்கள் அவருக்குப் பிரிவு உபசார விழா நடத்தினார்கள்.

விழா முடிந்த பிறகு ஒருவர் மட்டும் ஒரமாக உட்கார்த்து அழுது கொண்டிருந்தார். அவர் அருகில் சென்ற கலெக்டர் அவரைப் பார்த்துக் கண்கலங்கி "கவலைப்படாதே, நீ

என்மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பாய் என்று தெரியாது, அடுத்து வரப்போகும் கலெக்டர் என்னைவிட நல்லவராக இருப்பார்" என்று ஆறுதல் சொன்னார்.

அதற்கு அழுதுகொண்டிருந்த அந்த நபர் "சும்மா எனக்காகப் பொய் சொல்லாதீங்க சார், இதை நான் நம்பமாட்டேன், ஏன்னா உங்களுக்கு முன்னாடி இருந்த கலெக்டரும்

இதையேதான் சொன்னாரு" என்றார்.
==========
5. வைட்டமின் A, B, D, K எல்லாமே எதில் கிடைக்கும் .. .. ?

பழங்கள்

இல்லை

காய்கறிகள்

இல்லை

நீங்களே சொல்லிடுங்க

ஹி.... ஹி.... மெடிக்கல் ஷாப்பில்
==========
6. நம்ம தலைவருக்கு மறதி அதிகம்னு எப்படி சொல்றீங்க ?

நான் அவரு கட்சி எம்.பிங்கறதையே மறந்திட்டு நீங்க நம்ம கட்சிக்கு வந்தீங்கன்னா 25 லட்சம் தர்றோம்னு எங்கிட்டேயே வியாபாரம் பேசுறாருப்பா
==========
7. சார் நம்ம ஆபீசுல யார் யாரு லஞ்சம் வாங்குறாங்கன்னு எனக்குத் தெரியும் சார்

அப்படியா உடனே சொல்லு, முதல்ல அவங்களை வேலையை விட்டுத் தூக்கறேன்

ஆமா சார், யாருன்னு சொன்னா எனக்கு எவ்வளவு தருவீங்க சார்?
==========

இன்றைய மெகா ஜோக்:

8. ஒரு புலனாய்வு நிறுவனம் இன்டர்வியூவுக்கு மூன்று பேரை அழைத்திருந்தது.

முதலாவது நபர் அலுவலகத்துக்குள் போனதும் அவரிடம் ஒரு துப்பாக்கி கொடுக்கப்பட்டது. இதோ பாருங்க எங்களோட ஊழியராக இருக்கணும்னா நீங்க எங்களுக்கு

விசுவாசமா, நாங்க சொல்ற எதையும் கேட்கற ஆளா இருக்கணும் உங்க மனைவி பக்கத்து ரூம்ல இருக்காங்க போய் அவங்களை இந்தத் துப்பாக்கியால சுட்டுக் கொன்னுட்டு

வாங்க * என்றார்கள் இன்டர்வியூ கமிட்டியில் இருந்தவர்கள்.

இவர் துப்பாக்கியை எடுத்தார் ஆனால் அடுத்த நிமிஷமே ஸாரி என்னால என் மனைவியைக் கொல்ல முடியாது * என்று துப்பாக்கியைத் தந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.

இரண்டாவது நபர் வந்தார் அவரிடமும் அதே கட்டளை துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தனது மனைவி இருந்த அறை வரைக்கும் போனவர் மனசு தாங்காமல் எனக்கு என்

பெண்டாட்டிதான் வேணும் ஆளை விடுங்க என்று ஜகா வாங்கிவிட்டார்.

மூன்றாவது நபரிடம் இதே விஷயம் சொல்லப்பட துப்பாக்கியோடு அவரது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார். சிறிது நேரத்தில் அறையிலிருந்து அந்தப்

பெண்ணின் அலறல் கிளம்பியது. இன்டர்வியூ கமிட்டிக்காரர்கள் ஒடிப்போய் பார்த்தபோது அங்கே தன் மனைவியைத் துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொண்டிருந்தார் அந்த

நபர் "ஏம்பா இப்படி அடிக்கிறே ?" என்று கேட்டபோது, துப்பாக்கியில குண்டு நிரப்பாம கொடுத்து இருக்கீங்களே சார், சனியனை அடிச்சே கொல்ல வேண்டியிருக்கு" என்றார்

அவர்.

No comments:

Post a Comment