Thursday, July 9, 2009

பிட்டு - 22

1. ஊஞ்சலாடுவது என் பொழுது போக்கு என்கிறார் உங்கள் மனைவி, உங்களுக்கு என்ன பொழுதுபோக்கு ?

ஹி... ஹி.... ஊஞ்சலாட்டுறதுங்க!
==========
2. உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே.....? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல!
==========
3. இந்த ஊர்ல திருட்டு பயம் ஜாஸ்தின்னு பேசிக்கிறாங்க. நீங்க எப்படி இவ்வளவு தைரியமா போறீங்க ?

எனக்கு போலீஸ்னாதான் பயமே!
==========
4. காரோட என் மனைவியைக் காணோம்னு நான் புகார் கொடுத்திருந்தேனே, அதை நான் வாபஸ் வாங்கிக்கிறேன் சார்!

ஏன் ?

கார் கிடைச்சிடுச்சு.
==========
5. ஆசிரியர்: பரீட்சை அறையில் ஏண்டா தூங்குறே ?

மாணவன்: பதில் தெரியாட்டி முழிச்சுக்கிட்டு இருக்காதே-னு நீங்கதானே சொன்னீங்க.
==========
6. வாணி: புடவை தீப்பிடிச்சிகிட்டு உன் மாமியாரைக் காப்பாத்த நினைச்சதுக்காக உன் மேலே கொலை பழி விழுந்துதா ஏன் ?

ராணி: தீயை அணைக்க நான் அவங்களைக் கிணத்தக்குள்ளே தள்ளினது தப்பாம்.
==========
7. ஹலோ போலீஸ் ஸ்டேஷனா இங்க டி.வி-ல தொடர் பார்க்கவிடாம ஒரத்தர் குறுக்கம் நெடுக்கமா என் வீட்டுல நடந்து தொலைக்கறார்

யார்னு விசாரிச்சீங்களா ?

விசாரிச்சேன். யாரோ திருடனாம்.
==========

இன்றைய மெகா ஜோக்:

8. சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

ராமு: அதனால...?

சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

No comments:

Post a Comment