Saturday, October 3, 2009

பிட்டு - 64

1. அந்தக் காலத்துல ஏன் தட்டுங்கள் திறக்கப்படும்-னு சொல்லியிருக்காங்க ?

அப்பா காலிங்கெல் கிடையாது.. . அதான்

==========

2. டெலிபோனை எடுத்து என்னனு கேளு, போ

டெலிபோன் அடிக்கலையே அத்தை

ஆமா.. . அது அடிக்கிற வரைக்கும் காத்திருக்கணுமா ? நீயே போய் எடுத்தா குறைஞ்சு போயிடுவியாக்கும் ?

==========

3. தெரியாத்தனமா, பூசணிக்காய் வியாபாரம் செய்யறவர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிட்டேன்.

சமையல்ல பூசணிக்காயா ?

அதில்ல. தாம்பூலப் பையில் ஆளுக்கொரு பூசணிக்காய்.. .தூக்கிட்டு வந்ததில் ரெண்டு கையும் செம வலி

==========

4. நேத்து எங்க தலைவர், தொகுதிக்கு குறை கேட்கப் போயிருந்தப்ப ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சூழ்ந்துக்கிட்டு குரைக்க ஆரம்பிச்சிட்டுது

அப்படின்னா உங்க தலைவர் தொகுதிக்கு குரை கேட்கப் போனார்-னு சொல்லு.

==========

5. தலைவர் பேசும்போதெல்லாம் ரெண்டு மைக் வைக்கிறாங்களே.. . ஏன் ?

அவருக்கு ரெட்டை நாக்காம்

==========

6. பொண்ணு போட்டோவை மாப்பிள்ளைகிட்ட ஆபீஸ்ல கொண்டு போய்க் காட்டினது தப்பாப் போச்சு

ஏன் ?

தூக்கக் கலக்கத்துல இருக்கிறப்ப என்னை ஏமாத்திட்டீங்கன்னு சொல்றாரு

==========

7. கமல் ரசிகையை காதலிச்சது நல்லதாப் போச்சு

ஏன் ?

நான் முத்தம் கேட்கறதுக்குள்ள அவளே குடுத்துடறா.


இன்றைய மெகா பிட்டு ஜோக்:


8. சார்.. . இன்னைக்குக் குலுக்கலை வாங்கிட்டுப் போங்க.. காலையிலே யோகலட்சுமி வீட்டுக் கதவைத் தட்டப்போறா!

யோவ். .. போனவாரம் நான் தனலட்சுமி வீட்டுக் கதைவைத்தட்ன விவகாரமே இன்னமும் தீரலை.. .

No comments:

Post a Comment